India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயங்கும் பேருந்துகளில் பயணிகளை பாதிக்கக்கூடிய அதிக ஒலியுடன் பாடல்கள் ஒலிபரப்புவதோடு சில பேருந்துகளில் கேலி கிண்டல் செய்வதுபோல் இரட்டை அர்த்தங்களில் ஆபாச பாடல்கள், சாட்கி பாடல்கள் ஒலிபரப்புவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஓட்டுநர், நடத்துனருக்கு உரிய அறிவுரை வழங்கி பேருந்தில் உள்ள ஸ்பீக்கரை டிச.12 க்குள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டுக்காக வருகிற 13-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவி மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு டிச.13 முதல் டிச.16 வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பட்டாசு அச்சு தொழில் மீதான ஜிஎஸ்டி வரியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் 24வது மாவட்ட மாநாடு முன்னிட்டு செம்படை அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
சென்னை கிஞ்சித்காரம் தர்ம ஸம்ஸ்தாபனம் அமைப்பின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசிக்கும் ஆன்மீக சுற்றுலா நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆண்டாள் கோயிலில் குவிந்தனர். கோயிலில் ஆண்டாள், பெரியபெருமாள், பெரியாழ்வார், மணவாள மாமுனிகள் சன்னதியில் திருப்பாவை பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அந்த மாணவன் பேசியதாக கூறப்படுகிறது. நிலையில் நேற்று மதியம் மாணவியின் வீட்டிற்கு அந்த மாணவன் சென்றதாக கூறப்படுகிறது அந்த மாணவனை சிறுமியின் பெரியப்பா தாய் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியப்பா தாய் மீது மேற்கு போலீசார் வழக்கு பதிவு.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை(09.12.24) காலை ஆட்சியர் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியிடம் வழங்கி பயன் பெறலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை மாற்றத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் டிச.14 அன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிச.8 முதல் டிச.12 ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
நரிக்குடி சரக போலீசார் நரிக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனை தொடர்பாக ரோந்து மற்றும் வாகன தணிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பனைக்குடி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகிக்கும் வகையில் டூவீலரில் வந்த அ.முக்குளத்தை சேர்ந்த முத்தையாவிடம் சோதனை மேற்கொண்டதில் அவரிடம் சட்ட விரோதமான சுமார் 100 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய படை வீரர் கொடி நாளை முன்னிட்டு முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் நன்கொடை நேற்று துவக்கி வைத்தார். பின்னர் 20 நபர்களுக்கு ரூபாய் 5 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.