India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் 51% நிதி பங்களிப்பு, மாநில அரசின் 49 சதவீத நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் வேலிகள் இல்லாததால் இங்கு இரவோடு இரவாக அனுமதியின்றி 10க்கும் மேற்பட்ட மரங்களை நபர்கள் வெட்டி கடத்தி வருகின்றனர்.
திருச்சுழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையால் புகையிலை, சட்டவிரோத மதுவிற்பனை உட்பட குற்ற செயல்கள் தொடர்பாக 120 க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு செய்து 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோத புகையிலை விற்பனை தொடர்பாக 40 க்கும் மேற்பட்ட வழக்குகளில் 20 கடைகளுக்கு திருச்சுழி போலீசார் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.
சிவகாசியில் நிலத்தடி நீர் ஆதாரமாக செங்குளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாய் நிரம்பினால் நகரின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உள்ளது. நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இக்கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடையும் நிலை உள்ளதால் கழிவுநீர் கலப்பதை தடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் – ஜோகில்பட்டி இடையே குண்டாற்றின் குறுக்கே ரூ.9.89 கோடி மதிப்பில் பாலம் கட்ட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை அன்னல் அம்பேத்காரை நாடாளுமன்றத்தில் இழிவாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதில் திமுக கட்சியின் ஒன்றிய,நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நேற்று முன்தினம்(டிச.17) கனமழை பெய்தது. இந்நிலையில் ஆண்டாள் கோயில் வெளி பிரகாரத்தில் தேங்கிய மழை நீரை நகராட்சி பணியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை சரி செய்த பின், கோயில் வளாகத்தில் இருந்த மழைநீர் சிறிது சிறிதாக வடிந்தது. எனவே நகராட்சி நிர்வாகம் சாக்கடையை தூர்வார கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆத்திகுளம் கிராமத்தில் இன்று(டிச.19) காலை 9 மணி அளவில் கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்களுக்காக ஆத்திகுளம் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நின்று செல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் காரியாபட்டி – திருச்சுழி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற காரியாபட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
திருச்சுழி ரயில் நிலையத்தில் சிலம்புரயில் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் திருச்சுழி மற்றும் நரிக்குடி ரயில் நிலையங்களில் 20681/20682 சிலம்பு அதிவிரைவு ரயிலுக்கு மீண்டும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
கன்னியாகுமரியில் திருவுருவ சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் புகைப்பட கண்காட்சி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 பரிசு வழங்கப்படும். கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் டிச.22 க்குள் 94876 36976 என்ற எண்ணில் பதிவு செய்ய வேண்டும்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம், சிவகாசி மாரனேரி இன்னோவெல் இன்ஜினிரிங் இண்டர்நேசனல் லிமிடெட் இணைந்து திருக்குறளில் நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பில் தனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் டிச.29அன்று நடைபெற உள்ளது. இதில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 88836-50560 இல் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.