Virudunagar

News December 22, 2024

ரயில்வே நிர்வாகத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மனு

image

செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி, வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக கொல்லம் செல்லும் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை. இதனால் ரயில்வே நிர்வாகத்தின் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டாப்பிங் வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீவி.எம்.எல்.ஏ.மான்ராஜ் ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அனுப்பி உள்ளார்.

News December 22, 2024

ஸ்ரீவி. நீதிமன்றத்திற்கு ஆட்டோவில் அரிவாளுடன் வந்தவர் கைது

image

காரியாபட்டி அருகே கல்குளத்தை சேர்ந்த நாகலட்சுமி(25) சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதில், தேனி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவரை காரியாபட்டி போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவி., முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருந்த நிலையில், நாகலட்சுமியின் சகோதரர் கருப்பசாமி(35) ஆட்டோவில் அரிவாளுடன் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.

News December 21, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மருத்துவக் கழிவுகள் உட்பட வேறு அபாயகரமான கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதற்கோ அல்லது வேறு வழியில் அப்புறப்படுத்துவதற்கோ துணை புரிவோருக்கும் மருத்துவக் கல்லூரிகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News December 21, 2024

ஆட்சியர் தலைமையில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நேற்று(டிச.20) காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் 40 மாணவ மாணவியர்களுடன் காப்பி வித் கலெக்டர் என்ற 138வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு உயர்கல்வி வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.

News December 21, 2024

செல்போன் டவரில் ஏறி பெண் போராட்டம்

image

காரியாபட்டி தாலுகா மீனாட்சிபுரம் கிராமத்தில் இன்று சோலார் நிறுவனத்தினர் நெடுஞ்சாலை துறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் மின் கம்பம் அமைத்து மின் இணைப்பு தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பஞ்சவர்ணம் என்ற பெண் செல்போன் டவரில் ஏறி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காவல் துறையினர் அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

News December 21, 2024

முதியவர் மூளையில் சிக்கிய ஓட்டுத்துண்டு

image

விருதுநகர், கள்ளிக்குடி வடகம்பட்டியை சேர்ந்த 80 வயது முதியவர் டிச. 12அன்று கனமழையில் வீட்டுக்கூரை சாய்ந்து இவர் தலையில் விழுந்தததில், மூளையில் உடைந்த ஓட்டுத்துண்டு குத்திக்கொண்டு இருந்தது சி.டி ஸ்கேன் அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவர்கள் முதியவர் மூளையில் குத்தி நின்ற ஓட்டுத்துண்டை அகற்றி சாதனை படைத்தனர்.

News December 20, 2024

விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம்

image

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் நாளை (டிச.21) விருதுநகர் மாவட்ட நிர்வாகம் & வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ துவக்கி வைக்கவுள்ளார். இந்த முகாமில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என  தெரிவித்துள்ளனர்.

News December 20, 2024

தனியார் பெண்கள் கல்லூரியில் ராமானுஜர் பிறந்த நாள் விழா

image

விருதுநகர் தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று கணிதத் துறையின் சார்பில் கணிதமேதை ராமானுஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கணித மேதை ராமானுஜர் திரு உருவப் படத்திற்கு கல்லூரி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கணிதமேதை ராமானுஜம் ஒரு பார்வை எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News December 20, 2024

சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

image

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் சத்துணவு மையத்தை கடந்த 11 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஆய்வு மேற்கொண்டபோது சத்துணவு மையம் மூடப்பட்டிருந்தது. விசாரணையில் சத்துணவு அமைப்பாளா் கணபதி, சமையலா் குருலட்சுமி, உதவியாளா் அம்சவள்ளி ஆகியோா் பணிக்கு வராமல் இருந்தது தெரியவர சத்துணவு அமைப்பாளா் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளார்.

News December 20, 2024

விருதுநகர் புதிய துணைகாவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

image

விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பவித்ரா வேடசத்திரத்திற்கு பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய யோகேஷ் குமார் விருதுநகருக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய துணை காவல் கண்காணிப்பாளராக யோகேஷ் குமார் நேற்று(டிச.19) பொறுப்பேற்றுக் கொண்டார்.

error: Content is protected !!