Virudunagar

News November 15, 2024

சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் மனைவி மணிமேகலை மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து ஸ்ரீவி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்தது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,வழக்கு விசாரணையை டிச.13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News November 15, 2024

 பெளர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருள்மிகு ஸ்ரீ பூமிநாதர் கோயிலில் ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அப்போது சுவாமியை காய்கறிகள் மற்றும் அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக அன்னம் வழங்கப்பட்டது.

News November 15, 2024

அரசு மருத்துவமனையில் உங்களுக்கு உதவலாமா திட்டம்

image

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் தங்கள் நோய்க்கான மருத்துவரை கண்டறிந்து சிகிச்சை பெறுவதில் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சனையை சரி செய்யும் பொருட்டு மருத்துவமனை நிர்வாகத்தால் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் “உங்களுக்கு உதவலாமா” திட்டத்தை மருத்துவமனை நிர்வாகம் துவங்கியுள்ளது.

News November 15, 2024

மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு, ராக்கச்சி அம்மன்கோவில், விரியன் கோவில், மம்சாபுரம், அத்தித்துண்டு, திருவண்ணாமலை, பந்தப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலையை ஓட்டி பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் பந்தப்பாறை பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.

News November 15, 2024

புதிய சிடி ஸ்கேன் வசதியால் 900 மேற்பட்டோர் பயன்

image

ஶ்ரீவி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000 க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 100க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சிடி ஸ்கேன் எடுப்பதற்காக மதுரை, விருதுநகருக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனையடுத்து ரூ.2.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை 900க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.

News November 15, 2024

நடப்பாண்டில் வேகமெடுக்கும் பட்டாசு உற்பத்தி

image

வரும் தீபாவளி பண்டிகைக்காண பட்டாசு உற்பத்தி பணி துவங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி வழக்கத்தைவிட குறைவு என்பதால் தீபாவளி விற்பனையில் பட்டாசுக்கான கடும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் கடைசி நேர விற்பனை பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற நிலையை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தியை முன்னதாகவே துவக்கியுள்ள உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகரிக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.

News November 14, 2024

சிலையை அகற்றியதற்கு நீதிமன்றம் கண்டனம்

image

கடந்த ஆண்டு விருதுநகர் பா.ஜ.க அலுவலகத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகள் பாரத மாதா சிலையை பெயர்தெடுத்து அகற்றிய சம்பவம் உள்மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பாஜக சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் நேற்று சிலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும், மனுதாரர் அதே இடத்தில் சிலையை நிறுவி கொள்ளலாம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பு

image

அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு மல்லிகை பூ விவசாயம் நடைபெறுகிறது.‌ தற்போது பனி பொழிவு காரணமாக இந்த மல்லிகை பூ செடிகளில் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகை வரத்து குறைந்து இன்று மல்லிகை பூ விலை கிலோ ரூ.1,800 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல முல்லைப்பூ கிலோ ரூ.1,000, கேந்தி பூ ரூ.80, பிச்சி ரூ.40, அரளி ரூ.250 க்கு விற்பனை செய்யப்பட்டது.

News November 14, 2024

விருதுநகரில் மரபுக் கவிதை எழுதுதல் போட்டி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்படும் கரிசல் இலக்கிய திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கான மரபுக் கவிதை எழுதுதல் போட்டி நடக்க உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்கலாம். மரபுக் கவிதைகளை நவ.30க்குள் vnrkarisalt2024@gmail.com என்ற முகவரிக்கு பாமினி யூனிகோட் என்ற எழுத்து வடிவில் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் இந்த மாதத்தின் 3ஆம் வெள்ளிக்கிழமை ஆன நவம்பர் 15இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மவுலானா அபுல்கலாம் ஆசாத் தொழிற்பயிற்சி நிலையம் சிவகாசியில் நடைபெற உள்ளது. எனவே வேலை நாடுபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!