India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசியிலிருந்து கோவை நோக்கி நேற்று முன்தினம்(நவ.21) இரவு ஆம்னி பேருந்து ஒன்று 6 பயணிகளுடன் சென்றது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் டீசல் டேங்க் மீது மோதியதில் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சிவகாசி போலீசார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மாரீஸ்வரனை கைது செய்தனர்.
ஸ்ரீவி அருகே தைலாகுளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(56). இவர் நிலம் வாங்குவதற்காக ஶ்ரீவி கனரா வங்கி கிளையில் உள்ள சேமிப்பு கணக்கில் இருந்து கடந்த 6ம் தேதி ரூ.7.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் முன்பு நிறுத்தியிருந்த பைக்கில் 4 பேர் கொண்ட கும்பல் திருடி சென்றனர். இவ்வழக்கில் இன்று(நவ.23) ஆந்திராவை சேர்ந்த நாகராஜ், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னி மற்றும் பேரிடம் பெண்கள் ஆகியோரை கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக நவ.23,24 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 450 பஞ்சாயத்துகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு அமைத்து நேரடி ஆய்வுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் மணிபாரதி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், “மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள், தமிழக பொதும்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை , தேனி , திண்டுக்கல், விருதுநகர் , ராமநாதபுரம் ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சிறந்த பாட வல்லுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 11 புத்தகங்களை அச்சிட்டு விருதுநகர் மாவட்ட விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் இதனை வாங்கி பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தகுதியான நபர்கள் வரும் டிசம்பர் 31 க்குள் http://awsrds.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பிறகு அனைத்து ஆவணங்களையும் சமூகநல ஆலுவலகத்தில் கையேடாக பதிவு செய்து தாலா 3 நகல்கள் அனுப்பவேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் இன்று(நவ.22) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றார். இந்த கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர், மேலும் 175 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று(நவ.22) மதியம் 1 மணிக்குள் இரண்டு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே மாரனேரியைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன்(26). இவர் தனது தாய் மாரியம்மாளுடன் இருசக்கர வாகனத்தில் சிவகாசி நோக்கி சென்றுள்ளார். அப்போது ஒத்தப்புலி அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சங்கரேஸ்வரன், அவரது தாய் மற்றும் விபத்து ஏற்படுத்திய சரண்குமார் ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யும் வகையில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டு வருகிறது.இதில் 13 – 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் டெ.12 வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.