Virudunagar

News December 19, 2024

ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த எம்.பி

image

திருச்சுழி ரயில் நிலையத்தில் சிலம்புரயில் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் திருச்சுழி மற்றும் நரிக்குடி ரயில் நிலையங்களில் 20681/20682 சிலம்பு அதிவிரைவு ரயிலுக்கு மீண்டும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி  மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

News December 18, 2024

திருக்குறள் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

கன்னியாகுமரியில் திருவுருவ சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் புகைப்பட கண்காட்சி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 பரிசு வழங்கப்படும். கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் டிச.22 க்குள் 94876 36976 என்ற எண்ணில் பதிவு செய்ய வேண்டும்.

News December 18, 2024

விருதுநகரில் தனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கம்

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம், சிவகாசி மாரனேரி இன்னோவெல் இன்ஜினிரிங் இண்டர்நேசனல் லிமிடெட் இணைந்து திருக்குறளில் நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பில் தனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் டிச.29அன்று நடைபெற உள்ளது. இதில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 88836-50560 இல் தொடர்பு கொள்ளலாம்.

News December 17, 2024

போலிகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

image

மக்கள் உரிமையாளர்கள் தயாரிக்கும் பொருட்கள், கடைகளில் வாங்கும் எலக்ட்ரானிக் பொருட்கள், உடைகள், காபி, டி தூள், இதர பொருட்களில் ஏதேனும் விலை உயர்ந்த நிறுவன பெயர்களை கொண்ட போலியான பெட்டிகள், பைகள்,  சின்னம் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிந்தால் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் அறிவு சார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவுக்கு 9498184343 போன்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News December 17, 2024

சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்து

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சி பட்டாசு ஆலையில் தற்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சாத்தூர், வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வாகனங்கள் விரைந்துள்ளனர். இதில் 3 அறைகள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
.

News December 17, 2024

உலக தமிழ் கழகம் சார்பில் பாராட்டு விழா

image

ராஜபாளையம் திருவள்ளுவர் மண்டபத்தில் இன்று உலகத் தமிழ் கழகம், பாவேந்தர் பாரதிதாசன் பேரவை, ஒளவை தமிழ் மன்றம், அக்கினிச் சிறகுகள் ஆகிய அமைப்புகள் சார்பில் தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் உலகத் தலைவர் நிலவழகன் தலைமையில் சக்தி மகேஸ்வரி பொன்ராசு, தமிழ்வாணன், தமிழாசிரியர் மாடசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

News December 17, 2024

செங்கல் தொழிற்சாலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் செங்கல் தொழிற்சாலைகள் இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் இயக்க வேண்டும். இதனைத் தவறும் பட்சத்தில் தொழிற்சாலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை உட்பட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News December 17, 2024

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர்ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இந்த ஆண்டு டிசம்பர் 18 முதல் 27 வரை ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் அறிஞர்கள், அரசு அலுவலர்கள் தமிழ் மொழியின் மாண்புகள் குறித்து விளக்கக் கூட்டம் நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

ஸ்ரீவி. ஜீயர் மடம் சார்பில் காவல்துறையில் புகார்

image

சென்னையில் நடந்த ராமானுஜர் புத்தக வெளியீட்டு விழாவில் ஜீயர் கலந்து கொண்ட நிலையில் உண்மைக்கு புறம்பாக வேண்டுமென்றே மடத்தின் புகழுக்கும்,சடகோப ராமானுஜ ஜீயரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது. இது  பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக ரங்கராஜன் நரசிம்மன், யூடியூப்பர் பெலிக்ஸ் ஜெரால்டு,களஞ்சியம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மடம் சார்பில் புகார் அளித்துள்ளார்.

News December 16, 2024

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் டிச.27 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!