Virudunagar

News December 20, 2024

தனியார் பெண்கள் கல்லூரியில் ராமானுஜர் பிறந்த நாள் விழா

image

விருதுநகர் தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று கணிதத் துறையின் சார்பில் கணிதமேதை ராமானுஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கணித மேதை ராமானுஜர் திரு உருவப் படத்திற்கு கல்லூரி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கணிதமேதை ராமானுஜம் ஒரு பார்வை எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News December 20, 2024

சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

image

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் சத்துணவு மையத்தை கடந்த 11 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஆய்வு மேற்கொண்டபோது சத்துணவு மையம் மூடப்பட்டிருந்தது. விசாரணையில் சத்துணவு அமைப்பாளா் கணபதி, சமையலா் குருலட்சுமி, உதவியாளா் அம்சவள்ளி ஆகியோா் பணிக்கு வராமல் இருந்தது தெரியவர சத்துணவு அமைப்பாளா் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளார்.

News December 20, 2024

விருதுநகர் புதிய துணைகாவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

image

விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பவித்ரா வேடசத்திரத்திற்கு பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய யோகேஷ் குமார் விருதுநகருக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய துணை காவல் கண்காணிப்பாளராக யோகேஷ் குமார் நேற்று(டிச.19) பொறுப்பேற்றுக் கொண்டார்.

News December 20, 2024

விருதுநகர் ஜவுளி பூங்காவில் மரம் திருட்டு

image

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் 51% நிதி பங்களிப்பு, மாநில அரசின் 49 சதவீத நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் வேலிகள் இல்லாததால் இங்கு இரவோடு இரவாக அனுமதியின்றி 10க்கும் மேற்பட்ட மரங்களை நபர்கள் வெட்டி கடத்தி வருகின்றனர்.

News December 20, 2024

கடந்த 3 மாதங்களில் 120 வழக்குகள் பதிவு

image

திருச்சுழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையால் புகையிலை, சட்டவிரோத மதுவிற்பனை உட்பட குற்ற செயல்கள் தொடர்பாக 120 க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு செய்து 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோத புகையிலை விற்பனை தொடர்பாக 40 க்கும் மேற்பட்ட வழக்குகளில் 20 கடைகளுக்கு திருச்சுழி போலீசார் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

News December 20, 2024

செங்குளம் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்

image

சிவகாசியில் நிலத்தடி நீர் ஆதாரமாக செங்குளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாய் நிரம்பினால் நகரின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உள்ளது. நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இக்கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடையும் நிலை உள்ளதால் கழிவுநீர் கலப்பதை தடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 19, 2024

விருதுநகரில் ரூ.9.89 கோடியில் புதிய பாலம்

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் – ஜோகில்பட்டி இடையே குண்டாற்றின் குறுக்கே ரூ.9.89 கோடி மதிப்பில் பாலம் கட்ட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

News December 19, 2024

ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை அன்னல் அம்பேத்காரை நாடாளுமன்றத்தில் இழிவாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதில் திமுக கட்சியின் ஒன்றிய,நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News December 19, 2024

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சுத்தம் செய்த நகராட்சி ஊழியர்கள்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நேற்று முன்தினம்(டிச.17) கனமழை பெய்தது. இந்நிலையில் ஆண்டாள் கோயில் வெளி பிரகாரத்தில் தேங்கிய மழை நீரை நகராட்சி பணியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை சரி செய்த பின், கோயில் வளாகத்தில் இருந்த மழைநீர் சிறிது சிறிதாக வடிந்தது. எனவே நகராட்சி நிர்வாகம் சாக்கடையை தூர்வார கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 19, 2024

அரசுப் பேருந்தை வழிமறித்து சாலை மறியல்

image

ஆத்திகுளம் கிராமத்தில் இன்று(டிச.19) காலை 9 மணி அளவில் கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்களுக்காக ஆத்திகுளம் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நின்று செல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் காரியாபட்டி – திருச்சுழி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற காரியாபட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

error: Content is protected !!