Virudunagar

News February 11, 2025

குடும்ப அட்டை வகை மாற்ற தன்னார்வலர் சிறப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் அரிசி கடத்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும், மிகை புழக்கத்தைக் குறைக்கும் நோக்கிலும், அரிசி குடும்ப அட்டைகளை பிற வகைகளாக மாற்ற விரும்பும் தன்னார்வலர்களை வரவேற்று குடும்ப அட்டை வகையை மாற்றம் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் பிப்.15 அன்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News February 11, 2025

ஸ்ரீவி.ஆண்டாள் கோவிலில் லட்சார்ச்சனை

image

ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் கடந்த 2016-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்த நாளில் ஆண்டுதோறும் வருஷாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருஷாபிஷேக விழா கடந்த 8 ஆம் தேதி பூஜைகளுடன் தொடங்கியது. ஆண்டாள் கோயில் முன் உள்ள யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ரங்கமன்னாருக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

News February 11, 2025

மக்களவையில் கேள்வி எழுப்பிய விருதுநகர் எம்.பி

image

வேலூர் அருகே ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தள்ளிவிடப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து மக்களவையில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். ரயிலில் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் ‘பெண் குழந்தையை காப்போம்’ திட்டத்தில் என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News February 11, 2025

POS இயந்திரத்தில் மின்னணு கைரேகை பதிவு செய்யலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகளில் PHH, AAY குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மற்றும் இதர குடும்ப அட்டைகளின் உறுப்பினர்களும் தங்களது நியாய விலை கடைகளில் பிப்.12 முதல் பிப்.15 வரை தங்களது கைவிரல் ரேகை பதிவு செய்யலாம்.POS இயந்திரத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என்பதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News February 11, 2025

மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை 

image

விருதுநகர் மாவட்டத்தில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர்.

News February 10, 2025

இணையத்தில் நேரம் வீணடிப்பு – ஆட்சியர் அட்வைஸ்

image

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல் குறித்து கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் இணையத்தில் தங்களது நேரங்களை வீணடிப்பதாக தெரிவித்தார்.

News February 10, 2025

விவசாயிகள் தரவுகள் சேகரிக்க சிறப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் 51,464 விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் பயனடைய விவசாயிகளின் தரவுகள் சேகரிக்க கிராமங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. இப்பணிக்காக 601 கிராமங்களில் ஊராட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.10) முதல் 10 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. விவசாயிகள் தங்களது தரவுகளை முகாமில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News February 10, 2025

கனிம வளக் கொள்ளை குறித்து புகார் அளித்தவர் மீது தாக்குதல்

image

சிவகாசி அருகே எம்.ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் சின்னமாரி (40), அதே பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் தமிழ்செல்வம் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் மணல் திருட்டில் ஈடுபடுவதை காவல்துறையினரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக 4பேர் கொண்ட கும்பல் சின்னமாரியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவரது புகாரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 10, 2025

மினி பேருந்துக்கான  புதிய விரிவான திட்டம் வெளியீடு

image

மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் மே.1 முதல் நடைமுறைக்கு வருகிறது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் மினி பேருந்து புதிய விரிவான திட்டதின் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விவரங்களை தனியார் அமைப்பு, பேருந்து, மினி பேருந்து உரிமையாளர்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பிப்.10க்குள் சமர்ப்பிக்கலாம்.

News February 9, 2025

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது

image

சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ரவீந்திரா பட்டாசு ஆலைக்கு அருகே உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டிடத்தில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட காசி என்பவரை கைது செய்த போலீசார் ரூ.60,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!