India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பட்டமுத்து. இவர் தனது மனைவியுடன் சென்னை செல்வதற்காக கடந்த 10-ம் தேதி ஆம்னி பேருந்தில் வந்தபோது அழகாபுரியில் உள்ள ஹோட்டலில் இரவு உணவுக்காக பேருந்து நின்றுள்ளது. உணவு சாப்பிட்டு விட்டு, வந்து பார்த்த போது கைப்பையில் இருந்த தங்க நகை திருடு போனது.நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த அப்பாஸ்கான்,அக்ரம்கான், மோலா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க ஆக.19 அன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <

விருதுநகர் மாவட்டத்தில் 20205-ம் ஆண்டில் கஞ்சா விற்றவர்கள் மீது 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 266 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.6,89,100 மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேபோல் குட்கா விற்றதாக 1158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1230 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.24,11,297 மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.30,65,970 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

விருதுநகர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பெருமைகளை கொண்டுள்ளது
⚡விருதுநகர் காமராஜர் பிறந்த மண்
⚡சிவகாசி – குட்டி ஜப்பான்
⚡பருப்பு மற்றும் நல்லெண்ணெய்களை விலை நிர்ணயம் செய்யும் வர்த்தக நகரம்
⚡ராஜாபாளையம் நெசவின் தலைநகரம்.
SHARe பண்ணி வெளியூர்க்காரர்களுக்கு தெரியபடுத்துங்க!

வ.புதுப்பட்டி கிறிஸ்தியான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவர் அதே ஊரை சேர்ந்த காவலராக பணியாற்றி வந்த கண்ணன்குமாருடன் செல்போனில் பெண் போல் பேசி ஏமாற்றியதாக 2018-ம் ஆண்டு கண்ணன்குமார் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அய்யனாரை கொலை செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி டிஸ்மிஸ் காவலர் கண்ணன்குமார், அவரது நண்பர்கள் டென்சிங் உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.2550 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.165 விலை உயர்ந்து ரூ.5940 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.10 விலை உயர்ந்து ரூ.1900, ஆகவும் சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7000 ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தில் 2 நாட்களுக்கு முன் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக விஜயகரிசல்குளம், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை வெற்றிலையூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் வீடு வீடாக நடத்திய அதிரடி சோதனையில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி மாணவர்கள் இருவர் வகுப்பறையில் வைத்து தாக்கிக்கொண்ட சம்பவம் சகமானவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இரு மாணவர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பிய வைத்தனர். இதே பள்ளியில் கடந்த மாதம் போதையில் மாணவர்கள் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் தினமும் சிகிச்சைக்காக சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது மகப்பேறு மருத்துவர் இங்கு உடனடியாக நியமிக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை மருத்துவர் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.