India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பீகார் மாநிலம், சஹோரா பகுதியைச் சேர்ந்த தூரியாமான்ஜி, சீல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறியலாம். SHARE IT

ஸ்ரீவில்லிபுத்துார் சக்கரைகுளம் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் பொன்ராஜ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்து சென்ற செந்தில்குமார் மீது பொன்ராஜ் ஆட்டோவை ஏற்றி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பொன்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான விருதுநகர் மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையமாக மல்லாங்கிணர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு பரிசு காவலர் நாளில் சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களிடம் இருந்து மல்லாங்கிணர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு 100% மானியத்தில் ரூ.60 வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடித் தொகுப்பு 100% மானியத்தில் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.

விருதுநகர், கோட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் 745 /400 கிலோ வாட் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது முழுமை பெற்றதை தொடர்ந்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து கலெக்டர் சுகபுத்ரா தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் இராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டாசு கடைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் தற்போது வரை பூட்டியே கிடக்கின்றன. இதுபோன்ற பூட்டி கிடக்கும் பல பட்டாசு கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் சட்ட விரோதமாக தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே உரிய ஆய்வு நடத்த பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. <

விருதுநகர் மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இன்று 108, 102 ஆம்புலன்ஸ், இலவச அமரர் ஊர்திகளுக்கு ஓட்டுநர், உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஓட்டுநருக்கு ரூ.21,120 ஊதியமும், உதவியாளருக்கு ரூ.21,320 ஊதியமும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 73977 24824, 9942328254 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT
Sorry, no posts matched your criteria.