India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி ஆயுதப்படை அலுவலகத்தில் போலீசாருக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மாவட்ட எஸ்பி கண்ணன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் போலீசாருக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்கள் சம்பந்தமான குறைபாடுகள் குறித்து பரிசோதிக்கப்பட்டது. இதில் டாக்டர் அணில் குமார் தலைமையிலான மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.
விருதுநகர் சாத்தூர் பகுதியிலிருந்து வேன் ஒன்றில் 16 பேர், நேற்று மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாலிசந்தை பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பேரையூர் அருகே தம்பிபட்டி-சாலிசந்தை சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் வேனில் பயணம் செய்த 16 பேர் காயமடைந்து விருதுநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று(பிப்-8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் இதில் குறிப்பிட்டுள்ள அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் கடந்த 2016-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்த நாளில் ஆண்டுதோறும் வர வருஷாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. ஆண்டாள் கோயில் முன் உள்ள யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நாளை 108 கலச திருமஞ்சனமும்,நாளை மறுநாள் லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது.
கடந்த 2006 – 2011 தி.மு.க.ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்கு ஸ்ரீவி.முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கின் வாய்தா நேற்று இருந்த நிலையில்,உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை காரணமாக வழக்கின் விசாரணையை மார்ச் 7க்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஒத்திவைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலம் மகப்பேறு இறப்பு, குழந்தை இறப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு ஆட்சியர் அலுவலகத்தில் தாய்சேய் நல கண்காணிப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகள் பிரசவிக்கும் வரை கண்காணிக்கப்படுகின்றனர். மகப்பேறு தொடர்பாக சந்தேகங்களுக்கு 93454 92726, 93454 97705 இல் தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர் சத்திரப்பட்டிஅருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி .இவர் சமுசிகாபுரம் மெயின்ரோட்டில் இரவு நடந்து சென்றபோது அவ்வழியே டூ வீலரில் வந்த வாலிபர் செல்லும் வழியில் இறக்கி விடுவதாக கூறி காட்டுப்பகுதிக்கு சென்று மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்ததுடன் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டினார். கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் சுந்தர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பிப்.10 தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க மாவட்ட சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. மேலும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் மூலம் 1 முதல் 30 வயது வரை உள்ளோருக்கு 7.12 லட்சம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு,அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட ,மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மீன் உற்பத்தியை பெருக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மீன் குஞ்சு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் விருதுநகர் மாவட்டத்திற்கு 400 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 53 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 18.9.24 முதல் 18.12.24 வரை 8 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்த்து விற்பனை செய்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நிறைவு செய்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளது
Sorry, no posts matched your criteria.