India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மக்களே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உங்கள் ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, மருத்துவ காப்பீடு, போன்ற சேவைகளுக்கு இன்று 11.09.2025 ஆம் தேதி நமது விருதுநர் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்
✅சிவகாசி-ஜே.ஏ. போஸ் மகால்
✅ராஜபாளையம்-காமராஜ் திருமண மண்டபம்
✅காரியாபட்டி-சத்திரபுளியங்குளம் சமுதாயகூடம்
✅நரிக்குடி-அழகாபுரி சமுதாயகூடம்
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

காரியாபட்டி அருகே திருமால், சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி ராஜலெட்சுமி (22) பிரசவத்திற்காக காரியாபட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸை நிறுத்தி ஊழியர்கள் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் உதவியாளர் மற்றும் ஓட்டுநரை அனைவரும் பாராட்டினர்.

காரியாபட்டி அருகே திருமால், சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி ராஜலெட்சுமி (22) பிரசவத்திற்காக காரியாபட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸை நிறுத்தி ஊழியர்கள் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் உதவியாளர் மற்றும் ஓட்டுநரை அனைவரும் பாராட்டினர்.

விருதுநகர் இளைஞர்களே, திருச்சி பெல் நிறுவனத்தில் மூன்று விதமான Apprentice பணியிடங்களுக்கு 760 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்த தகுதியானவர்கள் 15.09.2025ஆம் தேதிக்குள் <

விருதுநகர் மாவட்டத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் 20 ஆய்வுக் குழுக்கள் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து விதிமீறிய 22 பட்டாசு ஆலைகளின் பட்டாசு உற்பத்திக்கு தற்காலிக தடை விதித்தது. இதனால் அந்த பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வந்த 1,100 ஆண், பெண் வேலையிழந்தனர். தவறுகள் சரி செய்து 2 மாதங்களாகியும் மீண்டும் உரிமம் வழங்கவில்லை என உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ராஜபாளையத்தை தலைமையிடமாக வைத்து சங்கரன்கோவிலை சேர்ந்த கங்காதரன், மனைவி தேவதாஸ் மரியநாயகம் மரக்கார் பிரியாணி கடை நடத்தி வந்தனர். தங்கள் நிறுவன பெயரில் கடை தொடங்குபவர்களுக்கு வருமானத்தில் 10%, மாதந்தோறும் ரூ.50,000 லாபம் ஈட்டலாம் என கூறி 239 பேரிடம் ரூ.13 கோடிக்கு மேல் மோசடி செய்தனர். இதில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மண்டல மேலாளரான சுந்தர்ராஜை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

விருதுநகர் அருகே வாய்ப்பூட்டான்பட்டியை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தீப்பெட்டி, தொழில் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு அறையில் இனாம்ரெட்டியாபட்டியை சேர்ந்த மாணிக்கம்(47), காரிசேரியை சேர்ந்த கருப்புசாமி(45) ஆகியோர் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. உடனடியாக சூலக்கரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. இதனிடையே ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்தாலோ, ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்து விளம்பரம் செய்தாலோ தமிழக சைபர் கிரைம் காவல்துறை தாமாக முன்வந்து கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாத்தூர் ரயில்வே இருப்பு பாதை இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிறுவாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் ரயில்வே பாதையை பயன்படுத்தாமல் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சாத்தூர் ரயில்வே இருப்பு பாதை நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிறுவாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் ரயில்வே பாதையை பயன்படுத்தாமல் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.