Virudunagar

News March 6, 2025

விருதுநகரில் நூதன முறையில் மோசடி செய்த இளம்பெண்

image

சாத்தூரை சேர்ந்த வரதராஜ பெருமாளிடம் திருவாரூரை சேர்ந்த 29 வயதுள்ள இளம்பெண் முகநூலில் பழகி அடிக்கடி வரதராஜ பெருமாளிடம் பணம் கேட்டுள்ளார். பின்னர் அப்பெண் அரைகுறை ஆடையுடன் தோன்றி இவரையும் அரைகுறை ஆடையுடன் இருக்க செய்து Screen Short எடுத்து அவரது மனைவிக்கு அனுப்புவதாக கூறி பணம், 80 பவுன் நகையை பெற்ற நிலையில் போலீசார் அப்பெண்னை கைது செய்து இவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.61 லட்சத்தை முடக்கியுள்ளனர்.

News March 6, 2025

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

image

விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் மார்ச்.10 அன்று விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இத்தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்ளலாம். மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7700 முதல் ரூ.13500 வரை வழங்கப்படும். மேலும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

News March 6, 2025

நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்

image

விருதுநகரில் அமைந்துள்ள அருள்மிகு பாரசக்தி அம்மன் பங்குனி பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் 21 சட்டி, 51 சட்டி, 101 சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்த சட்டி தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தான அலுவலகத்தில் முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம் என விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 6, 2025

செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்

image

விருதுநகர் அஞ்சல் கோட்டத்தில் ஜன.2025 வரை செல்வமகள் சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை 76,000 தாண்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் ரூ.1.30 லட்சம் வரை வரி சலுகை வழங்கப்படுகிறது. மார்ச்.2025 வரை மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி முகாம்களில் பங்கேற்று கணக்கு துவங்கி பயன்பெறலாம் என முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

News March 6, 2025

மனைவியை கொலை செய்த கணவர் கைது

image

வெம்பக்கோட்டை, தாயில்பட்டியில் மனைவி முனீஸ்வரியை எரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் பொன்னுசாமி நேற்று தப்பி சென்றார். பின்னர் பொன்னுசாமி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கொலை முயற்சியின் போது 40% தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையறிந்த போலீசார் அவரை கைது செய்து காவல்துறை கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

News March 6, 2025

தேசிய அளவில் சாதனை படைத்த ஸ்ரீவி எஸ்.ஐ

image

ஸ்ரீவி நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணமூர்த்தி(55). (சிவகாசி)ஈஞ்சார் நடுவப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர். இவர் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார். நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த தேசிய மூத்தோர் தடகள 5ஆயிரம் மீட்டர் ரேஸ் வாக் போட்டியில் பங்கேற்று 30.27 நிமிடங்களில் நடந்து முதலிடம் பெற்றார். *ஷேர்

News March 5, 2025

பிளஸ் 1 தேர்வை 22,178 மாணவர்கள் எழுதுகின்றனர்

image

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 45 மையங்களில் 4425 மாணவர்கள், 5178 மாணவிகள் என 9603 மாணவ மாணவிகள் பிளஸ் 1 தேர்வு எழுதுகின்றனர். மேலும் சிவகாசி கல்வி மாவட்டத்தில் 53 மையங்களில் 577 மாணவர்கள்,6798 மாணவிகள் என 12,575 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் தேர்வு மையங்களில் 98 முதன்மை கண்காணிப்பாளர்கள், 98 துறை அலுவலர்கள், 7 பறக்கும் படை குழுவில் 28 உறுப்பினர்கள் உள்ளனர்.

News March 5, 2025

மருத்துவமனை கட்டுவதாக மோசடி 

image

அருப்புக்கோட்டையை சேர்ந்த பானுமதி என்பவரிடம் மதுரை சிந்தாமணியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி வருவதாகவும், இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு 36% முதல் வட்டி தருவதாகவும், இவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து சிகிச்சைகளும் இலவசம் என கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் மேலும் சிலர் பணம் செலுத்தியுள்ளதால் அதில் பணம் கிடைக்காதவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.

News March 5, 2025

விருதுநகரில் ரூ.1.26 லட்சம் திருட்டு

image

விருதுநகர் அருகே பாவாலி நடுத்தெருவை சேர்ந்தவர் லெக்கன். இவர் வீட்டில் இருந்த 38,000 திருடுபோனதில் சிசிடிவி பாதிவுகளை ஆய்வு செய்ததில் அப்பகுதியில் கேபிள் டிவி நடத்தி வரும் அல்லம்பட்டியை சேர்ந்த ஸ்ரீராம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் இதற்கு முன் ரூ.88,000 திருடியதும், இதே போல் பலமுறை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் ஆமத்தூர் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

News March 5, 2025

வாசனை திரவிய தொழிற்சாலை அமையுமா?

image

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, மேட்டு தொட்டியாங்குளம், செம்பட்டி, குறிஞ்சாங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையும் மல்லிகை தடிமனாகவும், அதிக வாசனையாகவும் உள்ளது. எனவே அருப்புக்கோட்டையில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்து பூவுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!