Virudunagar

News March 15, 2025

மினி பஸ்கள் இயக்க விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள 41 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை ஆன்லைன் மூலம் ரூ.1600 செலுத்தி பெற்று அதனை பூர்த்தி செய்து மார்ச்.20 க்குள் விருதுநகர், ஸ்ரீவி மற்றும் சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்

News March 15, 2025

KT ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு தள்ளுபடி

image

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான புகாரில் மேல் விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கும் விண்ணப்பம் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

News March 15, 2025

TN BUDGET – விருதுநகருக்கான அறிவிப்பு

image

▶️விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சீமைகருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய ரூ.11.74 கோடி ஒதுக்கீடு.
▶️மழைவாழ் உழவர் முன்னேற்ற திட்டத்திற்காக ரூ.22.80 கோடி ஒதுக்கீடு.
▶️வத்திராப், ஸ்ரீவியில் ரூ.50.79 கோடி மதிப்பில் பரிவர்த்தை கூடம், சேமிப்பு கிடங்குகள்.
▶️ நீர்வடி மேம்ப்பாட்டு திட்டத்திற்காக ரூ.286.79 கோடி.
▶️தூர்வார, தோட்டக்கலை பயிர்கள், பண்ணைக்காடுகள் அமைக்க ரூ.68 கோடி ஒதுக்கீடு.

News March 15, 2025

விருதுநகரில் கிராம சபைக் கூட்டம் ஒத்திவைப்பு

image

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான மார்ச்.22 அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டமானது மார்ச்.23 அன்று நடைபெறவுள்ளது. கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News March 15, 2025

அமைச்சர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

கடந்த 2006 – 2011 ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது வழக்கு தொடர்ந்து ஸ்ரீவி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் சீராய்வு மனு தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் எடுத்தது. நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஏப்.25 க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 15, 2025

இன்றைய வேளாண்மை பட்ஜெட்டில் விருதுநகர் எதிர்பார்ப்பு

image

▶️திருச்சுழி, காரியாபட்டியில் மல்லிகை பூ வாசனை திரவிய தொழிற்சாலை.
▶️மாவட்டத்தில் வேளான் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
▶️சிறுதானிய குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும்.
▶️கரிசல் மண்களுக்கு ஏற்ற புதிய விதைகள், புதிய வேளான் பயிர்களை வழங்க வேண்டும்.
▶️வனவிலங்கு,மனித மோதலை தடுக்க வேண்டும்.
▶️காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
▶️ மிளகாய் வத்தல் தொழிற்சாலை.

News March 15, 2025

மருத்துவத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டம் தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்தத்தில் மருத்துவ அலுவலர் 2, செவிலியர் 2 சுகாதார ஆய்வாளர் 2, மருத்துவப் பணியாளர் 2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 24 மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 15, 2025

இந்த விவசாயிகளுக்கு மட்டும் உதவித் தொகை

image

விருதுநகர் மாவட்டத்தில் 51,681 பயனாளிகள் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ நிதித் தொகையினை பெற்று வருகின்றனர். ஆனால் 22,258 விவசாயிகள் மட்டுமே தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் இ-சேவை மையங்களில் தங்களின் நில உடமைகளை இலவசமாக பதிவு செய்யலாம். மீதமுள்ள 29,423 விவசாயிகள் மார்ச்.31க்குள் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடைய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

நரிக்குடி அருகே கரி வியாபாரி மீது தாக்குதல் – 3 பேர் கைது

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நெடுகனேந்தல் பகுதியை சேர்ந்த கரி வியாபாரியான செந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவால், கத்தி போன்ற ஆயுதங்களால் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து செந்திலை கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று ஜெயலட்சுமி,சந்திரசேகரன், ஜெயசீலன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

News March 14, 2025

விருதுநகரில் 2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்பு

image

ஜனவரி 2025 முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையுடன் கூட்டாய்வுகள், சைல்ட் லைன் புகார்களின் அடிப்படையில் உணவு கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுமான பணிகளில் ஆய்வு செய்ததில் 2 குழந்தை தொழிலாளர்கள் 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!