India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
3. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

விருதுநகர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04562 -252723 அணுகலாம். SHARE பண்ணுங்க

விருதுநகர் மக்களே; இந்திய ரயில்வேயில் செக்ஷன் கண்ட்ரோலர் பதவியில் 368 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 20-33 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் <

துலுக்கபட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(43). இவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 22ம் தேதி காவல் நிலையத்தில் பணியில் போது, மாடியில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து சுரேஷ்குமார் காயமடைந்தார். இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் சேவுகபட்டினம் அரசு பள்ளியில் நாளை (அக். 4) தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு, மகப்பேறு, இருதயம், தோல், கண், நரம்பியல், காது மூக்கு தொண்டை, மனநலம் என பல்வேறு துறை சார்ந்து மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது. SHARE

விருதுநகர் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <

விருதுநகர் (மா) அருப்புக்கோட்டையில் வரும் அக். 11ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அருப்புக்கோட்டை தேவாங்க கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில், 60 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 3,500க்கும் மேலான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு <

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள <

காரியாபட்டி அருகே தொடுவன்பட்டியில் உள்ள வாழவந்தம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. இதில் இங்குள்ள முளைப்பாரி பந்தலில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், நேர்த்திக்கடனுக்காக வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட முளைப்பாரி, மின்விளக்குகள், குழாய், ஓயர்கள் என அனைத்தும் எரிந்துள்ளன. இச்சம்பவம் குறித்து ஆவியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார்நத்ததை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (50), இவர் நேற்று காலை 5:45 மணிக்கு மேல தொட்டிய பட்டியில் இருந்து மோகன் பால்பண்ணையில் பால்கேன்கள் எடுத்து விட்டு, ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது நாய்கள் குறுக்கிட்டது. இதில், பாலத்தில் ஆட்டோ மோதியதில் நவநீதகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.