India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் அனைத்து பாதுகாப்பு ஒழுங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டும். வெளியூரில் இருந்து வரும் பயணிகள் ரயில், பஸ் போன்ற பொதுப் போக்குவரத்தில் பட்டாசுகளை எடுத்துச் செல்லக் கூடாது எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கால இனிப்பு, கார பலகாரம் தயாரிப்பு சூடு பிடித்துள்ளது. இவைகளை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பலகாரங்களின் தரம் குறைபாடு, சுகாதாரமற்ற கடைகள் குறித்து பொதுமக்கள் 04562-225255, 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம். SHARE IT

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

விருதுநகர் மக்களே உங்க பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை, கலங்கலாக வருகிறது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா? விருதுநகர் மாவட்ட குடிநீர் வழங்கல் கட்டுபாட்டு அதிகாரியிடம் போனில் (04632-220018) தெரிவிக்கலாம். உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். உங்க பகுதி மக்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

சிவகாசி பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாடுகின்றன. இவை பல சமயம் மக்களை கடிக்கவும் செய்தன. இந்நிலையில், விஸ்வநத்தம் ரோட்டில் செயல்படாமல் இருந்த தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மக்கள் கோரிக்கையை அடுத்து நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. சிவகாசி அரசு கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் ஷர்மிளா தலைமையிலான குழுவினர் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்தனர்.

ராஜபாளையம் சேத்தூர் சேகரப்பாண்டி மேல்நிலைப் பள்ளியில் இன்று “நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்” தொடங்கியுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் இலவசமாக சுகாதார பரிசோதனை செய்யக்கூடிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, இரத்த அழுத்தம், நீரிழிவு, கண் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்யப்படுகின்றன. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

விருதுநகர் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <

சிவகாசி சப் கலெக்டர் விடுப்பில் சென்றதை அடுத்து, பாலாஜி சிவகாசி RTOவாக பொறுப்பேற்றுள்ளார். இவர் நேற்று கூறுகையில், பட்டாசு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் அரசின் வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், வெளியூர்களில் இருந்து சிவகாசிக்கு பட்டாசு வாங்க வரும் மக்கள், ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பட்டாசுகளை கொண்டு செல்ல கூடாது என்றும் தெரிவித்தார்.

விருதுநகர் (மா) காரியாபட்டி அருகே அச்சம்பட்டியை சேர்ந்தவர் செல்லபாண்டியன். இவரது வீட்டில் செட் அமைக்கும் பணியில் தங்க மணி (19), கனகவேல் (19), கருப்பையா (20) ஆகியோர் பணியாற்றிய போது உயர் மின் அழுத்த கம்பியில் உரசி, மின் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தங்கமணி உயிரிழந்துள்ளார். கனகவேல், கருப்பையா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பனிக்குறிப்பு கிராமத்தில் இன்று ராக்கம்மாள் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் மீது அருகே இருந்த மின்சாரக்கம்பம் முறிந்து விழுந்ததில் வீட்டின் முன்புறம் இருந்த ஓடுகள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக இச்சம்பவத்தால் எந்தவித உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் சம்பவ இடத்தில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.