Virudunagar

News October 6, 2025

விருதுநகரில் யோகா பயிற்றுநர் பதவி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு யோகா பயிற்றுநர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதிலிருந்து தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், தகவலை அறிந்து கொள்ள 04562-225947 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News October 6, 2025

விருதுநகரில் யோகா பயிற்றுநர் பதவி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு யோகா பயிற்றுநர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதிலிருந்து தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், தகவலை அறிந்து கொள்ள 04562-225947 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News October 5, 2025

விருதுநகர் அருகே பட்டாசு தயாரித்தவர் கைது

image

விருதுநகர் சூலக்கரை போலீசார் குல்லூர் சந்தை சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காளிராஜ் என்பவர் பேன்சி ரக வெடி தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்கள் மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்த சூலக்கரை காவல்துறையினர் காளிராஜை கைது செய்தனர்.

News October 5, 2025

விருதுநகர்: PHH / AAY ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே மத்திய அரசின் (PMGKAY) என்ற திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..

News October 5, 2025

விருதுநகர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, விருதுநகர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

News October 5, 2025

விருதுநகர்: வெள்ளத்தில் சிக்கி 5 வயது சிறுவன் பலி

image

விருதுநகர்: கோவில்வீரார்பட்டியை சேர்ந்த அய்யனார், தனது மனைவி தேவகி. மகன் அரவிந்த் (5) உடன் டூவீலரில் நேற்று மாலை மலைப்பட்டி கோயிலுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள தரைப்பாலத்தில் ஓடிய காட்டாற்று வெள்ளத்தை கடக்க முயன்றபோது அதில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர். இதில் தம்பதி கரை திரும்ப, சிறுவன் அரவிந்த் வெள்ளத்தில் மூழ்கி பலியாகினான். சிறுவன் உடல் நேற்று இரவு மீட்கப்பட்டது.

News October 5, 2025

சிவகாசியில் பட்டாசு திரி பறிமுதல்., கைது!

image

தீபாவளி நெருங்கும் சமயம் என்பதால் சிவகாசியில், சாத்தூர் SI தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அருப்புக்கோட்டையை சேர்ந்த ஹரி பிரசாத் (21) என்பவரை பிடித்து சோதனை செய்கையில், அவரிடம், பட்டாசு திரி இருப்பது தெரியவந்தது. அவரிடம் பட்டாசு திரியை பரிமுதல்ஸ் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 5, 2025

விருதுநகர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம்! APPLY

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 5, 2025

விருதுநகர்: 3 விபத்துகள்., 3 பேர் பரிதாப பலி

image

எம்.புதுப்பட்டி – மங்களம் ரோட்டில் ஜெயக்குமார் தனது தாய் மரியாள் உடன் டூவீலரில் சென்றபோது வேகத்தடையில் மோதி மரியாள் கிழே விழுந்ததில் பலத்த காயமுற்று உயிரிழந்தார். அருப்புக்கோட்டை 4 வழிச்சாலையில் இரும்பு தடுப்பில் டூவீலர் மோதி முருகேசன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி (31) உயிரிழந்தார். சாத்தூர் பகுதியில் கார் மோதியதில் டூவீலரில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் சவரிராஜன் (76) பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

News October 5, 2025

விருதுநகர்: ஆடு, மாடு, கோழி வளர்ப்போர் கவனத்திற்கு..

image

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது மழைக்காலத்தில் கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு கால்நடைத்துறை மண்டல இணை இயக்குன பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். மாடுகளுக்கு பகலில் பசுந்தீவனம், இரவில் வைக்கோல் கொடுக்கவும், ஆடு, மாடு, கோழிகளை வெதுவெதுப்பான நீரை கொடுக்கவும், குளிர்ந்த சூழலை தவிர்க்கவும்,மாவட்டத்தில் கால்நடை அவசர கால ஊர்தி எண் 1962-ஐ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!