India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசியில் செயல்படும் தனியார் அலுமினிய தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘9498794987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவ வாய்ப்புள்ளது. SHARE பண்ணுங்க.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட தையல் பணியாளர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
பரளச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி, பருப்பு போன்ற பொருட்களை பொது மக்களிடம் குறைந்த விலையில் வாங்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுபோன்று ரேஷன் அரிசி, பொருட்கள் கடத்தல் குறித்து, பொதுமக்கள் 1800 599 5950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க பழைய ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் உள்ள தனியார் திரையரங்கில் நேற்று முன்தினம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இதில் அஜித் ரசிகர்களுக்கும், தியேட்டர் பவுன்சர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் பணி முடித்து வந்த பவுன்சிலர் தனுஷ் குமாரை நகராட்சி திமுக கவுன்சிலர் மணிமாறன் உளிட்டோர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் கவுன்சிலர் மணிமாறன் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் +2 படித்த 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலவச நீட் மற்றும் கியூட் நுழைவு பயிற்சி ஏப்.30 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தேர்வு குறித்து முழு பயிற்சி அளிக்கப்படும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகரில் வரும் மே 15ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும். பெயர் பலகைகளை தமிழில் வைக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே மாதவிடாய் காரணமாக மாணவியை வகுப்புக்கு வெளியே தேர்வெழுத வைத்து தனிமைப்படுத்திய விவகாரத்தில் பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக மாநில பொருளாளர் சிவகாசி திலகபாமா வலியுறுத்தியுள்ளார். பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.