India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிலம் தொடர்பான புகார் மனுக்கள் அதிக அளவில் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வு காணும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை நிலம் தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக ஆட்சியர் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 141.90 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக காரியாபட்டி பகுதியில் 17.20 மி.மீட்டர் மழையும், சாத்தூர் பகுதியில் 42 மி.மீட்டர் மழையும், கோவிலாங்குளம் பகுதியில் 25.50 மி.மீட்டர் மழையும், அருப்புக்கோட்டையில் 26 மி.மீட்டர் மழையும், விருதுநகரில் 7.60 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை இடமாறுதல் செய்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வெம்பக்கோட்டை முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியில் உள்ள ஜோதி ராஜபாளையத்திற்கும், ராஜபாளையம் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருக்கும் சதீஸ்குமார் வெம்பக்கோட்டைக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், ஷோபனாதேவி ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், வேல்பிரியா சாத்தூருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதன்படி, வத்திராயிருப்பு தனி வட்டாட்சியராக பணியில் இருக்கும் ராமநாதனை சாத்தூர் வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், வத்திராயிருப்பு தனி வட்டாட்சியராக தனமும், ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியராக தங்கம்மாளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக சீனிவாசன் என்பவரை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தனி வட்டாட்சியராக பணியாற்றிய இவர் விரைவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக பதவியேற்க உள்ளார்.
சிவகாசி பள்ளபட்டி கடம்பன்குளம் கண்மாயை தன்னார்வலர்கள் மூலமாக தூர்வாறிட விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகாசி பசுமை மன்றத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள தூர்வாரும் பணிகள் குறித்து இன்று சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் கண்மாய் பகுதியில் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.
மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு நடத்தும் விருதுநகர் மண்டல அளவிலான எறிபந்து போட்டி சாத்தூர் சன் இந்தியா பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற போட்டியில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட மாணவி முதலிடம் பெற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களை நிர்வாகிகள் பாராட்டினர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஆக.25 வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இரவு 10 மனிக்குள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் பிரபஷனரி ஆஃபீஸ்ர்ஸ் (PO) பணி காலியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் அடிப்படை பயிற்சி வகுப்பு வரும் 27ஆம் தேதி அன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியிருக்கிறது. விருதுநகர் தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
Sorry, no posts matched your criteria.