India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகரில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சுந்தரராஜன் என்பவர் அல்லம்பட்டி பகுதியைச் சார்ந்த மைதின் பாட்ஷா என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்தார். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொலை குற்றவாளி சுந்தரராஜன் என்பவருக்கு விருதுநகர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
வெம்பக்கோட்டையை சேர்ந்த பட்டாசு விற்பனையாளர் குருவராஜ் என்பவருக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் கடந்த 18ம் தேதி வெல்டிங் பணி நடைபெற்றது. அப்போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் குருவராஜ் 42, மற்றும் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக் 35, ஆகியோர் படுகாயமடைந்தனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கார்த்திக் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நிறைந்த நேரத்தில் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் ஆமை வேகத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெயில் காலத்தில் வயதானவர்கள் பஜாருக்கு வரும்போது மயக்கம் அடைந்தால் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூட வாகனங்கள் பஜாருக்குள் வர முடியாத அளவிற்க்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது.
சிவகாசி வழியாக பெங்களூரு, மைசூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 4 மற்றும் 7 ஆம் தேதி மைசூரில் இருந்து செங்கோட்டைக்கும் செப்டம்பர் 5 மற்றும் 8 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து மைசூருக்கும் இயக்கப்படும். இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்திற்கு 14.20(மதியம்) மற்றும் 21.33(இரவு) நேரத்தில் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில், கார்னீலியன் என்றழைக்கப்படும் சூதுபவள கல்மணியில், குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது மோதிரத்தில் பதிப்பிக்கும் வகையில் உள்ளது. இப்பதக்கம் 10.6 மில்லி மீட்டர் சுற்றளவும் 3.6 மில்லி மீட்டர் தடிமனும் 60 மில்லி கிராம் எடையும் கொண்டது. இச்செய்தியை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தனது ‘x’ வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து கலந்துரையாடும் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 100 வது கலந்துரையாடல் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நாளை(ஆக.23) விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தடகள போட்டிகள் ஆக.29 அன்று நடைபெற உள்ளது. இதில் 200, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 110 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், தொடர் ஓட்ட போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பெயர்களை பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்டம் சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்களில் 53 வகைகளில் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளோர் https://sdat.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தை சேர்ந்த ராமசுப்பு நஷ்டத்தால் மூடப்பட்ட தனது நூற்பாலை மின் இணைப்பை துண்டித்து டெபாசிட் தொகை ரூ.1.50 லட்சத்தை திரும்பித் தரக்கோரி கடந்த ஆண்டு மின்வாரிய உதவி பொறியாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஸ்ரீவி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டை நாடினார். இதில் டெபாசிட் ரூ.1.50 லட்சத்தையும், இழப்பீடாக ரூ.25,000, வழக்கு செலவு ரூ.5000 மின் பகிர்மான கழகம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமசுப்பு நஷ்டத்தால் மூடப்பட்ட தனது நூற்பாலை மின் இணைப்பை துண்டித்து டெபாசிட் தொகை ரூ.1.50 லட்சத்தை திரும்பித் தரக்கோரி கடந்த ஆண்டு மின்வாரிய உதவி பொறியாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டை நாடினார். இதில் டெபாசிட் ரூ.1.50 லட்சத்தையும், இழப்பீடாக ரூ. 25,000 வழக்கு செலவு ரூ.5 ஆயிரத்தை மின் பகிர்மான கழகம் வழங்க உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.