Virudunagar

News December 16, 2024

ஸ்ரீவி. ஜீயர் மடம் சார்பில் காவல்துறையில் புகார்

image

சென்னையில் நடந்த ராமானுஜர் புத்தக வெளியீட்டு விழாவில் ஜீயர் கலந்து கொண்ட நிலையில் உண்மைக்கு புறம்பாக வேண்டுமென்றே மடத்தின் புகழுக்கும்,சடகோப ராமானுஜ ஜீயரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது. இது  பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக ரங்கராஜன் நரசிம்மன், யூடியூப்பர் பெலிக்ஸ் ஜெரால்டு,களஞ்சியம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மடம் சார்பில் புகார் அளித்துள்ளார்.

News December 16, 2024

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் டிச.27 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

விருதுநகர் ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

மனிதக் கழிவுகளை , மனிதர்களே அகற்றும் நடைமுறை தங்கள் மாவட்டங்களில் நடைமுறையில் இல்லை என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சகாய பிலோமின் ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளட் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

News December 16, 2024

தவெக மீது நிதி அமைச்சர் மறைமுக விமர்சனம்

image

நேற்று ஆரம்பித்த கட்சி கூட தங்களுக்கு ஒரு பெரிய சக்தி இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தவெகவை மறைமுகமாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். சிவகாசியில் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான டிஜிட்டல் பிரச்சார பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த அவர், கடந்த 4 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி சாதனை படைத்து வருவதாக தெரிவித்தார்.

News December 16, 2024

எலி பேஸ்ட் விற்றால் கடும் நடவடிக்கை

image

எலி பேஸ்ட் என்ற மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த அங்கீகாரம் பெறாத பூச்சிக்கொல்லி மருந்துகள் தற்கொலைக்காக பொது மக்களிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இந்த வகை மருந்துகள் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு நிரந்தரமாக தடை விதித்துள்ளது. எனவே தடை செய்யப்பட்ட எலி மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News December 16, 2024

திருக்குறள் வினாடி வினா போட்டி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் வரும் 21 ஆம் தேதி அன்று பிற்பகல் 2 மணி அளவில் திருக்குறள் வினாடி வினா முதல் நிலைப் போட்டியானது விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே ஆர்வம் உடைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

இளையராஜா விவகாரம் குறித்து அரசு தரப்பு விளக்கம்

image

இளையராஜைவை கருவறைக்குள் அனுமதிக்காத விவகாரம் குறித்து இந்துசமய அறநிலையத்துறை இணை அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ திருக்கோவிலில் மரபு வழக்கப்படி அர்த்த மண்டபம் உள்ளே செல்ல கோவில் அர்ச்சகர், மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை; இளையராஜா மண்டபம் வாசல் படியில் இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என ஜீயர் கூறியதை அவரும் ஒப்புக்கொண்டார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 16, 2024

இளையராஜா விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன?

image

ஸ்ரீ வில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்யபாசுரம் இசைக்கச்சேரியில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு பின் அங்குள்ள ஆண்டாள் கோயிலில் வழிபாடு செய்தார். இந்நிகழ்வில் கருவறைக்குள் சென்ற இளையராஜைவை வெளியேறுமாறு கூறியதாக தகவல் வெளியானது. பின், கருவறை வெளியே நின்றே இளையராஜா வழிபாடு செய்தார்.
இதுகுறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்ற நிலையில், உங்களுடைய கருத்தினை COMMENT செய்யவும் .

News December 16, 2024

இளையராஜாவிற்கு கருவறை செல்ல அனுமதி மறுப்பு

image

ஸ்ரீ வில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்யபாசுரம் இசைக்கச்சேரியில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு பின் அங்குள்ள ஆண்டாள் கோயிலில் வழிபாடு செய்தார். இந்நிகழ்வில் ஜீயர்கள் சிலரும் பங்கேற்றனர்; பின் ஜீயர்களுடம் கருவறைக்குள் சென்ற இளையராஜைவை வெளியேறுமாறு ஜீயர்களும், பக்தர்களும் கூறியதாக தகவல் வெளியானது. பின், கருவறை வெளியே நின்றே இளையராஜா வழிபாடு செய்தார்.

News December 15, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் நாளை குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (டிச.16) மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை குறைத்திர் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று (டிச.15) தெரிவித்துள்ளது.

error: Content is protected !!