Virudunagar

News August 26, 2024

மாநில அளவிலான மாதிரி தேர்வில் பங்கேற்க அழைப்பு

image

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் வரும் 28, செப் 02 மற்றும் 06 ஆகிய தேதிகளில் சூலக்கரையில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் நேரடியாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது https:/forms.gle/JH6NeHJh8ETkv4qGA என்ற Google Form-ல் விண்ணப்பிக்கலாம்.

News August 26, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பதவியை சேர்ந்தவர் ஹரிராம், அவரது அம்மா மாரியம்மாள் ஆகிய இருவரும் அழகாபுரி -கிருஷ்ணன்கோவில் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே மற்றொரு டூவிலரில் அதிவேகமாக வந்த குமார் என்பவர் டூவிலர் மோதியதில் அம்மா மற்றும் மகன் இருவரும் காயமடைந்தனர். இது குறித்து நத்தம்பட்டி போலீசார் குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 25, 2024

பணியாளரை மிரட்டிய காங்கிரஸ் வட்டார தலைவர் கைது

image

ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த முருகராஜ்(52) என்பவர் ஸ்ரீவி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் ஶ்ரீவி அருகே தட்டாங்குளப்பட்டியில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் கேட்டு விற்பனையாளர் நாகராஜன்(50) என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரில் ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முருகராஜை கைது செய்தனர்.

News August 25, 2024

விநாயகர் சதுர்த்தி வழிமுறைகள் வெளியீடு

image

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு வழிமுறைகள், கரைக்கும் இடங்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்ட இடத்தில் மட்டுமே மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறையின்படி சிலைகளை கரைக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

News August 25, 2024

இராஜபாளையம் – சங்கரன்கோவில் ரயில் நேரம் மாற்றம்

image

இராஜபாளையம் – சங்கரன்கோவில் இடையே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக செங்கோட்டை – மதுரை பயணிகள்‌ ரயில் (வண்டி எண்‌ : 06664) வரும் ஆகஸ்ட் 26, 27 மற்றும் செப்டம்பர் 8,9 ஆகிய தேதிகளில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு பதிலாக மதியம் 1 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

News August 25, 2024

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி – தேதி நீட்டிப்பு

image

2024ம் ஆண்டு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி 5 பிரிவுகளில் மாநில அளவில் வரும் செப்., மற்றும் அக்.,மாதங்களில் நடைபெற உள்ளது.இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 12 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். இதில் முன்பதிவு செய்ய செப்.,2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. http://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

ஊஞ்சல் சேவையில் ஆண்டாள் ரங்கமன்னர்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆவணி மாத 2 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று இரவு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News August 24, 2024

வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஒரு அதிசயம்

image

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் 3ஆம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன திமிலுடைய காளையின் உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுடு மண்ணால் ஆன காளையின் உருவம் கிடைத்ததன் மூலம் அந்த காலத்திலேயே வீர விளையாட்டுக்களில் முன்னோர்கள் அதிக ஆர்வம் காட்டியிருப்பதாக அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

மாவட்ட ஆட்சியரின் திடீர் வருகையால் அதிர்ந்த அதிகாரிகள்

image

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்படும் மணுக்கள், தீர்வுகள் நிலுவையில் உள்ள மனுக்கள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியரின் திடீர் வருகையால் அரசு அதிகாரிகள் திகைத்து நின்றனர்.

News August 24, 2024

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் அழகாபுரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து சக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் உள்ளிட்ட உடன் இருந்தனர்.

error: Content is protected !!