India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூர் கிராமத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம், மற்றும் வ.உ.சி பிறந்த நாளன்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சி குறித்து மக்கள் அறியும் ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர் பத்திர வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் உள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் எதிரே மதுரை சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்த செய்தி இன்று (ஆக.27) காலை நமது வே2நியூஸ் ஆப்பில் வெளியானது. இந்நிலையில் செய்தி எதிரொலியாக உடனடியாக போக்குவரத்து போலீசார் மாலை நேரத்தில் குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையில் மண்ணை கொட்டி கட்டிட பணியாளர்கள் மூலம் செம்மைப்படுத்தி சாலையை சீரமைத்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமுதாய அமைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். தகுதியான நபர்கள் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் நகர்ப்புற வாழ்வாதார மையம் ராஜபாளையம் நகராட்சி என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிவகாசி அருகே திருத்தங்கள் பகுதியில் அமைந்துள்ள செங்குளம் கண்மாய் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்படுகிறது. இக்கண்மாயில் அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதால் கடந்தாண்டு இங்கு பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆட்சியர் ஆய்வு நடத்தினார். தூர்வாரும் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில் இங்கு சரணாலயம் அமைக்கப்படுமா? என சிவகாசி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் காரியபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். லாரி ஒட்டி வருகிறார். நேற்று காஞ்சிபுரத்திற்கு இரும்பு உருளைகளை ஏற்றி வந்தார். மாதவரம் அருகே லாரியை நிறுத்தி ஒய்வு எடுத்தார். இந்நிலையில் எதிர்பாரத விதமாக பாலமுருகன் லாரி மீது மற்றொறு லாரி மோதியதில் இரும்பு உருளை கட்டபட்டிருந்த சங்கிலி அறுந்து லாரியின் முன் பக்கத்தை உடைத்து கிழே விழுந்தது. இதில் பாலமுருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மது விலக்கு காவல் ஆய்வாளர் ஆனந்தி தலைமையிலான போலீசார் ராஜபாளையம் – தென்காசி சாலை, முறம்பு பகுதியில் போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் மது பாட்டில்களை கடத்தி வந்த குமார் மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 349 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக முதலமைச்சரின் சாலை விரிவாக்க திட்டம் 2024 – 25 ன் படி அருப்புக்கோட்டை தாலுகா கமுதி விலக்கு முதல் செட்டிகுளம் வரையிலான 6 கி.மீ தூரம் சாலை ரூ 36.40 கோடி மதிப்பில் 4 வழி சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்நிலையில் இன்று 4 வழி சாலை அமைய உள்ள பகுதியில் மின்கம்பங்களை மாற்றி அமைத்தல் போன்ற முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் ஆவரம்பட்டி அரசு பேருந்து பணிமனை அருகே வடக்கு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது வெள்ளைத்தாளில் நம்பர் எழுதி லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் சோழராஜபுரம் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை கைது செய்த போலீசார் அவர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆக.26) கோகுலாஷ்டமியை முன்னிட்டு பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நவநீதகிருஷ்ணன் சுவாமியை வழிபட்டு மகிழ்ந்தனர்.
Sorry, no posts matched your criteria.