India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட முன்னேற விளையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டம் மற்றும் முன்னேற விளையும் வட்டாரமான திருச்சூழி வட்டாரத்திற்கு முழு நிறைவு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 6 இலக்குகளை 100% முழுமையாக அடைவதற்கு சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் கீழ ராஜகுலராமன் கிராமத்தில் ஊரணி ஆக்கிரமிப்பில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை வருவாய்த் துறையினர் அகற்றி உள்ளனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீனிவாசன் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் கிராமத்து மக்கள் 90 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
ஸ்ரீவி நகராட்சியில் 4 பில் கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதில் ஆனந்தராஜ் கம்பம் நகராட்சிக்கும்,வசந்தி விருதுநகர் நகராட்சிக்கும், சுரேஷ்குமார் பெரியகுளம் நகராட்சிக்கும், பாண்டிச்செல்வி உசிலம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஸ்ரீவி.நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சொத்து வரி வசூலில் 100% நிறைவு செய்துள்ள நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டது ஊழியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்.28 அன்று பூரம் நட்சத்திரத்தன்று நந்தவனத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்.28 அன்று பூரம் நட்சத்திரத்தன்று நந்தவனத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அப்பகுதிக்கு சென்று போலீசார் சோதனை செய்ததில் காளிராஜ்(36), மாயக்கண்ணன்(39), செந்தில்குமாரி(35) ஆகியோர் தகரக் கூடாரத்தில் பேன்சிரகப் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் பட்டாசுகளை பறிமுதல் செய்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் இருந்து மதுரைக்கு சென்ற தனியார் பஸ்சில் பெரியகருப்பன் என்பவர் ஏறி படியில் நின்று கொண்டு இடையூறு செய்ததை கண்டக்டர் ரஞ்சித்குமார் கண்டித்துள்ளார். இதனையடுத்து, முத்துக்குமார், பெரியகருப்பன், சிவா உள்ளிட்ட சிலர் பஸ்சிற்குள் ஏறி கண்டக்டர் மற்றும் டிரைவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று (அக்.22) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான மாணவர் தூதுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ராஜபாளையம் அருகே 4 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின்பேரில் அபகரிக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நித்தியானந்தாவின் சொத்துக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார் என்றும், அவருக்கு எதிராக வழக்குகள் இருந்தும் அவர் நீதிமன்றத்திற்கு வருவதில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவி, குன்னூர் நடுநிலைப்பள்ளியில் ரூ.16 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு கட்டிடம் கட்டினால் மாணவர்கள் சத்துணவுக் கூடத்திற்குச் செல்ல அவதியடைவார்கள். எனவே அருகில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கட்ட கோரி மாற்றுத்திறனாளி முகேஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். இவருக்கு அப்பகுதி மக்கள் ஆதரவு அளித்த நிலையில் அதிகாரிகள் 1 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
Sorry, no posts matched your criteria.