Virudunagar

News September 24, 2024

பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு

image

விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் கடந்த 19ம் தேதி லட்சுமி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் என்ற தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 90 சதவீத தீக்காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குருமூர்த்தி (19) என்ற தொழிலாளி இன்று (செப்.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

News September 24, 2024

அரசு மருத்துவமனை பாதுகாவலர் மீது தாக்குதல்

image

அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுரு. இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பாதுகாவலராக பணியில் உள்ளார். இந்நிலையில் நேற்று வார்டில் சண்டையிட்டவர்களை வெளியே செல்ல கூறினார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ் குமார், முனீஸ்வரன், முத்துக்குமார், மகாலிங்கம் ஆகிய 4 பேர் சேர்ந்து பாதுகாவலர் விஜயகுருவை தாக்கினர். இது தொடர்பாக கிழக்கு போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

News September 24, 2024

சொத்து தகராறில் 6 பேர் மீது வழக்கு

image

சாத்தூர் அருகே வன்னிமடை வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமிக்கும் (50).இதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரகுமார் என்பவருக்கும் சொத்து தகராறு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருப்பசாமியை மகேந்திரகுமார், வரதராஜன், பாண்டிமுருகன், முத்துமாரி, பாண்டியம்மாள், பாண்டீஸ்வரி ஆகிய 6 பேரும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து கருப்பசாமி புகாரியின் பேரில் இருக்கன்குடி போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 23, 2024

கஞ்சா விற்ற பணம் தராததால் இளைஞர் படுகொலை

image

விருதுநகரை சேர்ந்த அப்துல் மஜீத் (22) கேளம்பாக்கம் அருகே செங்கல்மால் பகுதியில் டிங்கரிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நண்பர்கள் மோகன் (20), சகாயராஜ் (20) ,விமல் ராஜ் (20), ராகுல் (24) ,செட் (23) ,ஸ்ரீகாந்த் (20) ,அபிலேஷ் (22), ரூபன் (18) ஆகியோர் கஞ்சா விற்ற 10,000 பணத்தை திரும்பி தராததால் அப்துல் அஜீசை கொலை செய்து ஏரிக்கரையில் புதைத்தனர். எட்டு பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்

News September 23, 2024

சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்த ஆட்சியர்

image

விருதுநகர் தெப்பம் பஜாரில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேலும் தீபாவளி 2024 விற்பனை குறியீடாக ரூ.55 லட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.

News September 23, 2024

மானாமதுரை – விருதுநகர் வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

image

மானாமதுரை – அருப்புக்கோட்டை – விருதுநகர் வழிதடத்தில் 121 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நாளை மறுநாள் காலை 9:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மானாமதுரை, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக தென்காசி ரயில் நிலையம் செல்ல உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் தண்டவாளம் அருகில் உள்ளவர்கள் கவனமாக இருக்க ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

News September 23, 2024

அகழாய்வில் மேலும் 3 புதிய அகழாய்வு குழிகள்

image

வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 10 குழிகள் தோண்டப்பட்டு அதில் ஏராளமான சங்கு வளையல்கள், கல்மணிகள், செப்புக்காசுகள், சுடுமண் முத்திரை, சூது பவளம் உள்பட 1,800 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது மேலும் 3 புதிய குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டி அந்த குழிகளும் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. புதிய குழிகளிலும் ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

News September 23, 2024

விருதுநகர் சந்தையில் பாமாயில் விலை உயர்வு

image

விருதுநகர் சந்தையில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.9100 முதல் ரூ.9400 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.150 விலை குறைந்து ரூ.12,350 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.200 விலை குறைந்து ரூ.9700 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.250 ஆகவும் நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.165 குறைந்து ரூ.6150, பாமாயில் ரூ.415 விலை உயர்ந்து ரூ.850 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News September 23, 2024

97 மாணவர்களுக்கு ரூ.6.75 கோடி கடன்

image

விருதுநகரில் முன்னோடி வங்கி அனைத்து வங்கிகளில் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாமில் 97 மாணவர்களுக்கு ரூ.67 கோடிக்கு கல்வி கடன் பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.இம்முகாமில் மாவட்டத்திலுள்ள 200 தேசிய மயமாக்கப்பட்ட, தனியார் வங்கி கிளைகளின் மாவட்ட அளவிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மாணவர்கள், பெற்றோர்களுக்கு கல்விகடன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

News September 23, 2024

சிவகாசி அருகே மருந்து வாங்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்

image

சிவகாசி அருகே சூர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரிசாமி 40. இவர் நேற்று மாலை சித்துராஜபுரத்தில் உள்ள மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்று விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து ஏற்படுத்திய துர்க்கை பாண்டி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!