Virudunagar

News February 7, 2025

1.75 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16 கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கப்பட்டது. மேலும் 2025 ஜனவரி 5ல் முடிக்க திட்டமிடப்பட்டு விடுபட்ட கால்நடைகளுக்கு செலுத்துவதற்காக 21 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கோமாரி நோய் தடுப்பு ஊசி 1,75,773 கால்நடைகளுக்கு செலுத்தப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 28 ஆயிரம் கால்நடைகள் பயன்பெறும்.

News February 7, 2025

விருதுநகரில் தாய்ப்பால் கொடுத்த குழந்தை உயிரிழப்பு

image

அல்லம்பட்டியை சேர்ந்த முனீசுவரியின்(27) 3 மாத குழந்தை ஹரிஹரசுதன் இரவில் அழுததாகவும், உடனே முனீசுவரி தாய்ப்பால் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் காலையில் பார்த்த போது குழந்தை அசைவற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

News February 7, 2025

விடுமுறையில் கஞ்சா விற்ற ராணுவ வீரர் கைது

image

வத்திராயிருப்பு அருகே இலந்தகுளத்தை சேர்ந்தவர் செந்தில் முருகன் (32). இவர் செகந்திராபாத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். நத்தம்பட்டி போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 210 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், எங்கிருந்து கஞ்சாவை கொண்டு வந்து விற்பனை செய்தார் என விசாரித்து வருகின்றனர். 

News February 7, 2025

விருதுநகர் : சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற 10ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News February 6, 2025

அருப்புக்கோட்டையில் பணம் செலுத்தியவர்கள் புகார் அளிக்கலாம்

image

அருப்புக்கோட்டையில் ஸ்ரீராமலிங்கா மில்ஸ் பிரை வேட் லிமிடேட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் பணம் பெறப்பட்டது. அதில் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக அதன் நிறுவனர் மீது முதலீட்டாளர்கள் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் முதலீடு செய்து புகார் அளிக்காதவர்கள் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அசல் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம்.

News February 6, 2025

ஒழுக்க கமிட்டிகளை கண்காணிக்க கோரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் 2023 இல் மாணவரை கண்டித்ததற்காக ஆசிரியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகளை ஏற்படுத்த அப்போதைய சி.இ.ஓ வளர்மதி உத்தரவிட்டார். தற்போது சமூக வலைதளங்களில் மாணவர்கள் ஜாதி தொடர்பாக பதிவிடுவது, போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்க கமிட்டிகள் முழு வீச்சில் செயல்படுத்தி அதை கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News February 6, 2025

விருதுநகர் மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அரிய வாய்ப்பு

image

விருதுநகர் மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அறிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWS-ல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 6380079317 என்ற எண்ணை அழைக்கலாம் (OR) WHATS APP-ல் மெசேஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் <>(இங்கே கிளிக் செய்து)<<>> உங்கள் தகவல்களை பகிரலாம். *செய்தி ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பகிரவு

News February 6, 2025

போதை பொருட்கள் தொடர்பாக APP மூலம் புகார் அளிக்கலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் போதைப்பொருள், புகையிலை பொருட்கள் தொடர்பாக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடையை சுயவிவரங்கள் இன்றி புகார் செய்வதற்கு DRUG FREE TN என்ற அலைபேசி செயலியை(MOBILE APP) பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். SHARE IT

News February 5, 2025

விருதுநகர் அருகே பட்டாசு வெடி விபத்து

image

விருதுநகர் அருகே சின்னவாடி பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி என்ற பட்டாசு ஆலையில் தற்போது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள் சிக்கி இருப்பாதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

News February 5, 2025

பெண் தொழில்முனைவோர் கலந்து கொள்ள அழைப்பு

image

பெண்களிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடுஅரசால் TN-RISE மகளிர் புத்தொழில் கவுன்சில் நிறுவப்பட்டது. தொழில்முனைவோர் நிறுவனங்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட இணக்க சேவைகளை வழங்குவதற்காக மதுரையில் வேளாண் உணவு வர்த்தகமையத்தில் பிப்.7 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை Compliance Mela-வினை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9994142115, 9514737043 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!