India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சிவகாசியிலிருந்து விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நகருக்குள் வராமல் ரிங் ரோடு வழியாக செல்லும் வகையில் ரூ.400 கோடியில் ரிங் ரோடு அமைக்க மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக திட்டமிடப்பட்டன. இப்பணிகளுக்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு பணி துவங்கும் என நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நல வாரியத்திற்கு 2024ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய நலநிதியை 2025 ஜனவரி 31க்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், தொழிலாளர்களின் குழந்தைகள் பட்டம் மேற்படிப்பு வரை பயில கல்வி உதவித் தொகையாக ரூ.1000 முதல் 12000 வரை வழங்கப்படுகிறது. இதனை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அர்ச்சனா நதி வைப்பாறு நதிகளுக்கு நடுவில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இரு நதிகளையும் இணைத்து கட்டப்பட்டுள்ள அணையில், வண்ணவிளக்கு, செயற்கை நீர் ஊற்றுடன் பூங்கா, படகு விடுவதன் மூலம் சிறந்த சுற்றுலா தலமாக மாற வாய்ப்புள்ளது.
தொழில் நகரமான சிவகாசியில் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சியில் அரசு சார்பாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தது மாநகராட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 13,000 சதுர அடி அளவில் கட்டுவதற்காக இந்த மாநாட்டு அரங்கத்தின் மாதிரி புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சிறுநீரக கோளாறால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உவர் தன்மை கொண்ட நிலத்தடி நீர் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. நிலத்தடி நீரின் தன்மையை மாற்ற மழைநீர் சேகரிப்பு அவசியம் என்ற நிலையில் தற்போது நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் 1087 புதிய குளங்கள் உருவாக்க திட்டமிட்டு 266 புதிய குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குளங்களை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (நவ.12) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22 ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தவறாது கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் இன்று (நவ.12) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறவுள்ள கரிசல் இலக்கிய திருவிழாவை முன்னிட்டு சிறந்த இளம் படைப்பாளர் விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு சிறந்த கதை தொகுப்பு, நாவல் ஆய்வு கட்டுரை போன்ற படைப்புகளை அனுப்பலாம். ஆர்வமுடையோர் நவ.,30ஆம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவி.மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படும். இந்நிலையில், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை(நவ.13) முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியில் அபாயகரமான இடங்களில் தொழிலாளர்களுக்கு பதிலாக ரோபோக்கள் மூலமாக உற்பத்தி செய்யும் முயற்சியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புதிய தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்திக்கு வருகை இல்லாத காரணத்தினால் அனைத்து இடங்களிலும் இயந்திரமயமாக்க ஏற்பாடு நடைபெற்று கொண்டுவருகிறது. இதன் விளைவாக வரக்கூடிய காலங்களில் 90% சதவிகிதம் குறைப்பதற்கு வாய்ப்புள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். இவர் 2021 இல் மகள் உறவு கொண்ட 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இது குறித்தான வழக்கு கேரள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டி நிரூபனமான நிலையில் அவருக்கு கேரள நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.