India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆண்டுதோறும் மாசி மாதம் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும் .அந்த வகையில் விழுப்புரம் பிரஹன்ன நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் வரும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில், நேற்று இரவு பொதுமக்கள் அமரும் இடத்தில் அடையாளம் தெரியாத நபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
பிளாஸ்டிக் இல்லாமல் பராமரிக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்களுக்கு தமிழக அரசு சார்பில் மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. இதற்கு தகுதி உள்ளவர்கள் இதற்கான விண்ணப்பத்தை விழுப்புரம் கலெக்டர் அலுவலக இணையதளத்திலும், மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து, கலெக்டர் அலுவலகத்தில் மே ஒன்றாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக ஜூலை 17ஆம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியதில் கள்ளக்குறிச்சி பள்ளி சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய 53 சிறாரில் 37 பேர் ஆஜராகினர்.
சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி கயத்தாரைச் சேர்ந்த ஜானகிராமன் புதுச்சேரியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமியை ஜானகிராமன் அடித்து துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், 20 ஆண்டுகள் தண்டனை விதித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (21.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் இன்று (21.02.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஈஸ்வர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் உடன் இருந்தனர்.
இந்திய துணை குடியரசுத் தலைவர் அனைத்து உலக தாய்மொழி நாளையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவரவர் தாய்மொழிகளில் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்திற்கு நேற்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுதியுள்ள பதில் கடிதத்தில், தமிழில் கடிதம் எழுதியதற்கு நன்றி எனவும், பாராளுமன்றத்தின் முக்கிய ஆவணங்களை எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் வழங்க வேண்டும் என்று பணிவோடு வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்யச் சென்ற போது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணனை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மாதம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன. விசாரணையில், இவற்றை பெங்களூரிலிருந்து கடத்தியது போலீசாருக்கு தெரிய வந்தது.
Sorry, no posts matched your criteria.