India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் அடுத்த பனங்குப்பத்தைச் சேர்ந்தவர் சுஜித் பிளஸ் 2 படித்துள்ளார். இவர் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ( மார்ச் 07 ) நேற்று வயிற்று வலியால் அவதியடைந்து மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரத்தை சேர்ந்த 15 வயது மாணவி,வந்தவாசி அருகே அரசு பள்ளியில் +1 படிக்கிறார்.கடந்த, 24ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக விடுதி காப்பாளரிடம் கூறிவிட்டுச் சென்ற மாணவி,வீடு செல்லவில்லை.புகாரின் அடிப்படையில் உதயசங்கர் (22),மாணவியை காதலித்து கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.இவர் டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (07.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த <
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை சித்தேரிப்பட்டைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்பவர் ஒருதலையாக காதலித்தாக கூறப்படுகிறது. மாணவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி படிக்கும் பள்ளிக்கு ஆகாஷ் பைக்கில் சென்று தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆகாஷை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்ட சென்னையைச் சோ்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸாரின் ரோந்துப் பணியில் சிக்கிய பால்சாமி(47), மதன்குமாா்(30) விழுப்புரம், சுற்று வட்டாரப் பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளின் கதவுகளை உடைத்து நகைகளை திருடியவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (06.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மேல்மலையனூர் வட்டம் பரிதிபுரம் அருகே உள்ள சஞ்சீவிராயன்பேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். குழந்தை வரம் அளித்தல், பல வருடங்களாக தடைபட்ட திருமணம், தொலைந்த பொருள் திரும்ப கிடைக்க வீர ஆஞ்சநேயரை ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
விழுப்புரம் நகராட்சி திடலில் இன்று (06.03.2025) நடை பெற்று வரும் ஐந்தாம் நாள் புத்தகத் திருவிழாவில், VGLUG foundation சார்பில், இணைய வழியில் நாட்டுமையாக்கப்பட்ட புத்தகங்கள் தரவிறக்கம் தொடர்பாக அமைக்கப்பட்ட அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரதஹ்மான், அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.