Villupuram

News February 25, 2025

பாத்திரத்தில் இருந்த நீரில் மூழ்கி பெண் குழந்தை பலி 

image

கண்டமங்கலம் பள்ளிப்புதுப்பட்டு, சேர்ந்தவர் பெ.அல்லிமுத்து ஜீவிதா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இந்த கடந்த பிப்.21-ஆம் தேதி ஜீவிதா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி  மயக்கமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜீவிதா உயிரிழந்தாா். இது குறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 24, 2025

CISFல் வேலை- கைநிறைய சம்பளம்!

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 23, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (23.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 23, 2025

விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நியமனம்

image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் வடக்கு மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் தேர்தலுக்கு டாக்டர் சேகர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்த காரணத்தினால், அவரது மனு ஏற்கப்பட்டு அவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 23, 2025

வானுாரில் முதல்வரை வரவேற்பு பேனர் அகற்றம்

image

வானூர் ஒன்றிய அதிமுக.வினர் எழுதிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் சுவர் விளம்பரங்கள் மீது திமுக.வினர் விளம்பர பேனர்களை ஒட்டினர். இதையறிந்த வானூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், நேற்று காலை, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் திரண்டனர். புள்ளிச்சப்பள்ளம், ராவுத்தன்குப்பம் இரும்பை உள்ளிட்ட இடங்களில் அதிமுக சுவர் விளம்பரங்கள் மீது ஒட்டப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு பேனரை அகற்றினர்.

News February 23, 2025

இந்திய ரயில்வேயில் வேலை: 10th பாஸ் போதும்

image

இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News February 23, 2025

காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் தற்கொலை

image

கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார்சாவடி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன் மகள் முத்தரசி (23). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன்(30) என்பவரை காதலித்தார். இருவரும் தர்மபுரியில் திருமணம் செய்து கொண்டனர். லட்சுமணன் குவைத்துக்கு செல்ல இருந்த நிலையில் நேற்று முத்தரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 23, 2025

மயிலம் அருகே நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

image

மயிலம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பாலமுருகன். நான்காம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று கோபாலபுரம் குளத்தில் இறங்கிய போது நீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து மயிலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 23, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (22.02.2025) இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 22, 2025

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆய்வுக்கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ் ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்றப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் இன்று (பிப்.,22) மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் 22.02.2025 நடைபெற்றது.

error: Content is protected !!