Villupuram

News October 10, 2025

விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.10) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1.NBC கோவிந்தம்மாள் திருமண மண்டபம், திண்டிவனம் 2.PLF கட்டிட வளாகம், தெள்ளாமூர் 3.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், தென்னமாதேவி 4.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், 5.பார்த்தசாரதி திருமண மண்டபம், பூவரசன்குப்பம் 6.ஸ்ரீ கிருஷ்ணா மஹால், வி.சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. ஷேர்!

News October 10, 2025

அக்.11இல் கிராம சபை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள அனைத்து ஊராட்சி அமைப்புகளிலும் வரும் (ஆக.11) ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றது. ஊராட்சி வளர்ச்சிப் பணி, நிதி நிர்வாகம், செலவினம், பருவ கால முன்னெச்சரிக்கை குறித்தும், கிராமங்களில் தெரு, நீர் நிலைகள் போன்றவற்றில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது என்று செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலர் தெரிவித்துள்ளனர்.

News October 10, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.09) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 9, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (09.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 9, 2025

நலத்திட்ட உதவிகள் வழங்கிய மு.அமைச்சர் மஸ்தான்

image

வட சிறுவலூர் ஊராட்சியில், கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடைபெற்றது. இன்று (அக்.9) முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி, தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மயிலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் சேதுநாதன்,திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News October 9, 2025

வீடூரில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள் கண்டெடுப்பு

image

வீடுர் பகுதியில் சென்னை விவேகானந்தா மிஷன் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாயகிருஷ்ணன், திண்டிவனம் அரசு கல்லுாரி வரலாற்றுத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஜெயப்பிரதா, கவுரவ விரிவுரையாளர் ஆகியோர் நேற்று (அக்.8) கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும் ஒரு பானை ஓட்டில் தொன்மை காலத்தில் பயன்பாட்டில் இருந்த குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2025

முதல்வரிடம் 1 மாத சம்பளத்தை அளித்த மு.அமைச்சர் பொன்முடி

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கா பொன்முடி (அக்.8) தமிழக முதல்வரை சந்தித்து திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நிறுவிவரும் தந்தை பெரியாரின் சிலைக்கு தனது ஒரு மாத சம்பளத்தை முதல்வரிடம் கொடுத்தார். முதல்வர்மகிழ்ச்சி யுடன் பெற்றுக் கொண்டார்மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News October 9, 2025

விழுப்புரம் : டிகிரி போதும், மத்திய அரசு வேலை

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க் மூலம்<<>> இன்று முதல் அக்.29க்குள் விண்ணப்பிக்கலாம். *வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க*

News October 9, 2025

செஞ்சி அருகே லஞ்சம் வாங்கிய VAO கைது!

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வரிக்கல் கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் என்பவர் பட்டா மாற்றம் செய்வதற்காக ரூபாய் 10,000 லட்சம் கேட்டுள்ளார். அவர் லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் தேவராஜை கையும் களவுமாக பிடித்து, செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 9, 2025

விழுப்புரம்: வேளாண்துறை சார்பில் மானியம்!

image

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும் என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://tnhorticulture tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணைப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!