Villupuram

News March 17, 2024

1966 வாக்குச்சாவடிகள் அமைப்பு – ஆட்சியர் 

image

விழுப்புரம் மாவட்டத்தில் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக மொத்தம் 1966 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 12095 அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 113 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், மொத்தம் 16,69,577 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மானூர் கிராமத்தில் நேற்று (மார்ச்.16) இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மரக்காணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தென்களவாய் பழனி இல்லங்கள் தோறும் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் ஏராளமான ஒன்றிய மாவட்ட கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

News March 16, 2024

விழுப்புரம் அருகே விபத்து: ஒருவர் பலி

image

கண்டாச்சிபுரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வஜ்ரவேல் (42). இவர் நேற்று (மார்ச் 15) திருவண்ணாமலையில் இருந்து கண்டாச்சிபுரத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் வழுக்கி விபத்துகுள்ளானது. இதில் படுகாயமடைந்த வஜ்ரவேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 16, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 31 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, https://cra.tn.gov.in/-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!