India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருக்கோவிலூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி இவர், கடந்த 10ம் தேதி, விழுப்புரம் அடுத்த கலிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்த, 22 வயதுடைய தனது பழைய பெண் நண்பரின் வீட்டிற்கு சென்று திருமணம் ஆன பிறகும், நட்பாக பழக வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளார். இதில் அப்பெண்ணை புண்ணியமூர்த்தி நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை புண்ணியமூர்த்தியை கைது செய்தது.
வானூர் அடுத்த தைலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள அலுமினிய பைப்பிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை படுகாயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (13.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். 15ஆம் தேதிக்குள் <
பௌர்ணமியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்ல (TRAIN NO.06130) என்ற எண் கொண்ட ரயில் (மார்ச் 13) காலை 9.25 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 11.10 க்கு சென்றடயும் அதே மார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து (TRAIN NO.06129) என்ற எண் கொண்ட ரயில் 12.40 புறப்பட்டு விழுப்புரத்திற்கு 14.15 க்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தை அடுத்துள்ள டி.முத்தையால்பேட்டை, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (37), கொத்தனாராக வேலைப் பாா்த்து வந்த இவா், நேற்று முன்தினம் முத்தையால்பேட்டை பம்பை ஆற்றுக்கு குளிக்கச் சென்றாா். அப்போது திடீரென நீரில் மூழ்கி செந்தில்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மரக்காணம் அடுத்த மண்டைவாய்புதுக்குப்பத்தில் அமைந்துள்ள இறால் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்பவர் சுதாகர். இவர் கடந்த (மார்ச் 8) தேதி மின்மாற்றிக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (12.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம், டி.மேட்டுப்பாளையம் ஜெயந்திர சரஸ்வதி பள்ளி அருகில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி (ம) ஆராய்ச்சி மையத்தில் தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி (SC/STமட்டும்) 14-03-2025, 15-03-2025, 17-03-2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தமிழக அரசு மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைத்து வருகின்றனர். இன்று காலை நெல் மூட்டைகளுடன் லாரி கமிட்டியில் நின்றிருந்துள்ளது. அப்போது, லாரியின் அருகில் இருந்த மதில் சுவர் திடீரென உள்வாங்கியதால் நெல் மூட்டைகளுடன் அருகில் இருந்த கிணற்றில் லாரி விழுந்தது.
Sorry, no posts matched your criteria.