India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!

விழுப்புரம்: குடியாத்தம் பகுதியை சேர்ந்த யூ-டியூபர் குமரன், தனது யூ.டியூப் சேனலில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சண்முகத்தை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக நிர்வாகி சுரேஷ்பாபு, விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக வரும் மார்ச்.7ம் தேதி குமரன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே ADVANCE தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேற்று நகர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுகுமார் (67) என்பவர் கடையில் சோதனை மேற்கொண்டனர். அவர் விற்பனைக்காக குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் முதியவரையும் கைது செய்தனர்.

விழுப்புரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

விழுப்புரம்: செவலபுரையைச் சேர்ந்த பெண் (30) ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது வயிறு பெரிதாக காணப்பட்ட நிலையில் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கருப்பையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து 3 கிலோ எடை கொண்ட கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.

திண்டிவனத்தில் நேற்று விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, திண்டிவனம் தொகுதி அமைப்பாளர் சந்திரலேகா எழுந்து, செயற்குழு உறுப்பினர் ராதிகா தன்னை தரக்குறைவாக பேசியதாக முறையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா, அவரை கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் மற்ற நிர்வாகிகள் சமாதானம் செய்து வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.

1. RBI-ல் Office Attendant பிரிவில் 572 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.47,029 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.04. சூப்பர் வாய்ப்பு. மிஸ் பண்ண வேண்டாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.