India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ புகழேந்தி இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறலாம், அதற்கான அறிவிப்பும் சில நாள்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் தெளி கிராமத்தில் அடிக்கடி மின்னழுத்த பற்றாக்குறை ஏற்படுகிறது. அதுபோக மாலை 4 மணிக்கு துண்டிக்கப்படும் மின்சாரம் இரவு 9 மணிக்குதான் வருகிறது. அடிக்கடி இதுபோல நடப்பதால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படிக்கின்ற மாணவர்கள் மிகவும் பாதிப்பை சந்திக்கின்றனர். குழந்தைகளும், பெரியவர்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி நேற்று காலமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று அவரது சொந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும் இறுதிச் சடங்கு முடியும் வரை அமைச்சர் க.பொன்முடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் R.இலட்சுமணன், மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகர் ஏஜி சபையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வி.சி.க வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு வழக்கறிஞர் M.D. பாபு தலைமையில் பானை சின்னத்திற்கு இன்று ( ஏப்ரல் 7) வாக்கு சேகரித்தனர். உடன் திண்டிவனம் நகர செயலாளர் மு.செ.எழிலரசன் ,திமுக நிர்வாகிகள் மற்றும் வி.சி.க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, கலைஞர் அறிவாலயத்தில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளருமான நா. புகழேந்தி மறைவை தொடர்ந்து நேற்று அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார்.
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி இன்று (ஏப்ரல் 6) உடல்நிலை குறைவால் காலமானார். 1955ஆம் ஆண்டு பிறந்த புகழேந்தி அத்தியூர் திருவாதித்தினை கிராமத்தைச் சேர்ந்தவர். உளுந்தூர்பேட்டை அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை கற்றுள்ளார். திமுக கிளைக் கழகச் செயலாளராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும், ஒன்றிய சேர்மன் ஆகவும் பின்னர் ஒன்றிய செயலாளராகவும் படிப்படியாக வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, விழுப்புரம் தொகுதியில் 76 – 14, ஆரணி தொகுதியில் 108 – 3 ஆகியவை பதற்றமான – மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி இன்று (ஏப்.6) காலமானார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த அவர் நேற்று விக்கிரவாண்டியில் ஸ்டாலின் வருகையையொட்டி ஏற்பாடுகளை கண்காணிக்க வந்த நிலையில் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி சற்றுமுன் இறந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.