Villupuram

News April 15, 2024

விழுப்புரம் அருகே முருகன் கோவிலில் சஷ்டி விழா

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் நேற்று (ஏப்ரல் 14) சஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பால், தயிர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. சஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News April 14, 2024

துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு

image

விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதிக்குட்பட்ட வானூர் சட்டசபை தொகுதியில் கடப்பேரிக்குப்பம், எறையூர், பூத்துறை, குயிலாப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பதற்றமான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கோட்டக்குப்பம் டி. எஸ். பி சுனில் மேற்பார்வையில், துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

News April 14, 2024

புரட்சியாளர் பிறந்தநாள் கொண்டாடிய விசிகவினர்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விழுப்புரம் மைய மாவட்டத்தின் சார்பில் இன்று(ஏப்ரல் 14) புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. மைய மாவட்ட செயலாளர் திண்டிவனம் திலீபன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான கட்சியினரும், பொதுமக்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

News April 14, 2024

விழுப்புரம்: ரூ.2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்‌ செய்யப்பட்டது. எஸ்.பி சமய்சிங் மீனா உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் ‌அதிரடி‌ நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது போலீசார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 14, 2024

தேர்தல் தேசத்தின் பெருவிழா

image

திண்டிவனத்தில் நேற்று (ஏப்ரல்.13) வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்த லயன் சங்க உறுப்பினர்கள். திண்டிவனம் உழவர் சந்தையில் பொதுமக்களிடம் “தேர்தல் தேசத்தின் பெருவிழா”என திண்டிவனம் லயன் சங்கம் மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து நடத்திய பேரணியில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டி பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகித்தனர்.

News April 13, 2024

விழுப்புரம்: 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல்.19 அன்று நடைபெறுகிறது. இதையொட்டி, (ஏப்ரல்.17) காலை 10 மணி முதல் (ஏப்ரல்.19) நள்ளிரவு 12 மணி வரை மற்றும் (ஜூன்.4) ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News April 13, 2024

பானையுடன் வாக்கு சேகரிக்கும் ஒன்றிய சேர்மன்

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ் புத்துப்பட்டு கிராமத்தில் இன்று (ஏப்.13) காலை பானை சின்னத்திற்கு மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் வாக்கு சேகரித்தார். விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்காக மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் கீழ்புத்துபட்டு கிராமத்தில் இன்று காலை வீடு வீடாக வாக்கு சேகரித்தார். இளைஞர் ஒருவர் தலையில் பானையை சுமந்தபடி சுற்றி வருவது வேடிக்கையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

News April 13, 2024

விழுப்புரம் அருகே இளம் பெண் மாயம்

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூர் அருகே கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், இவரது மகள் சகிலா (22). இவர் கடந்த 4 நாள்களாக காணவில்லை என அவரது தந்தை ராமலிங்கம் நேற்று (ஏப்ரல் 12) புகார் அளித்துள்ளார். 4 நாள்களுக்கு முன்பு கடை வீதிக்கு சென்றவர் வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் ராமலிங்கம் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News April 12, 2024

டீ போட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் , விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் இன்று (ஏப்ரல் 12) தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கிருந்த டீ கடைக்கு சென்று டீ போட்டு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News April 12, 2024

ஆட்சியர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி அனைத்து துறை அலுவலர்களுடன் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

error: Content is protected !!