Villupuram

News March 16, 2025

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

image

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். விழுப்புரத்தைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 2 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

News March 16, 2025

விழுப்புரம் அருகே விபத்தில் 3 பேர் பலி

image

விழுப்புரம், செஞ்சி அடுத்த வல்லம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவர் பலி. துக்க நிகழ்விற்காக சென்னையில் இருந்து வரும் பொழுது ஏற்பட்ட விபத்தில் துரைகண்ணு(50), பச்சையம்மாள்(45), கோபிகா (17) ஆகியோர் சம்பவ இடத்துலேயே பலி ஆகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 16, 2025

இரண்டு பஸ்கள் மோதல்: டிரைவர் பலி 

image

திண்டிவனம் – சென்னை சாலையில் கோனேரிக்குப்பத்தின் வழியாக, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், அவ்வழியாக வந்த கம்பெனி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் கம்பெனி ஊழியர்கள் 11 பேர் காயமடைந்தனர். ஆம்னி பஸ் டிரைவர் அனிஷ் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 15, 2025

விழுப்புரம்: துன்பங்களை போக்கும் நாகம்மன் கோயில்

image

விழுப்புரம் மாவட்டம், தும்பூர் தாங்கல் என்னும் திருத்தலத்தில் உள்ள நாகம்மன் திருக்கோவில், தொன்மையான வரலாறும், பெருமையும் கொண்டதாக விளங்குகிறது. ராகு- கேது தோஷங்கள், காள சர்ப்ப தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களுக்கும், கண்கண்ட பரிகாரத் தலமாக தும்பூர் தாங்கல் கோயில் திகழ்கிறது. ஆலயத்தின் வடமேற்கே அமைந்துள்ள இயற்கையான புற்றில், இதற்கான பரிகார பூஜை செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News March 15, 2025

விழுப்புரம்: மாணவனை தலையில் அடித்த டீச்சர் சஸ்பெண்ட்

image

விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கள்ளிகுளத்தை சேர்ந்த மாணவன் சாது சுந்தர், 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வகுப்பில் சக மாணவனை தாக்கியதாக, உடற்கல்வி ஆசிரியர் செங்கனி சுந்தரை குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது. மாணவனுக்கு கண்பார்வை போய்விட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆசிரியர் செங்கனியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

News March 15, 2025

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

image

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வானுார்அடுத்த பூத்துறையில் அரசு செம்மண் குவாரியில், விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. வழக்கு விசாரணைக்கு, அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை. அதையடுத்து, வழக்கு விசாரணை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News March 15, 2025

நிதிநிலை அறிக்கை குறித்து விசிக தலைவர் பேட்டி

image

விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

News March 14, 2025

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற இணையதளமான https://viluppuram.dcourts.gov.in/ ஐ அணுகி உறுப்பினர் சேர்க்கைக்கான தகுதி, அனுபவம், மதிப்பூதியம் மற்றும் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி தொடர்பான அனைத்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

News March 14, 2025

கஷ்டங்களை நீக்கும் வக்ர காளியம்மன்

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருவக்கரை கிராமத்தில் வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு ராஜகோபுரத்தை அடுத்து உட்பகுதியில் இடப்பக்கமாக அருள்தரும் வக்கிரகாளிம்மன் சன்னதி உள்ளது. ஜாதகத்தில் வக்ர சனி, வக்ர குருவால் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறவர்கள் திருவக்கரை வக்ர காளியம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News March 14, 2025

பட்ஜெட்: அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்க ஆய்வு

image

விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

error: Content is protected !!