India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக-வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமதாஸ் தலைமையில் கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், ராமதாஸ் படங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அன்புமணியின் படம் நீக்கப்பட்டதன் மூலம் ராமதாஸ்-அன்புமணி இடையிலான அரசியல் பிளவை வெளிப்படுத்துகிறது.
விழுப்புரம் மாவட்டம் பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் இன்று (செப்.3) காலை ஏற்பூட்டி உழுவதற்காக இரண்டு காளைகளுடன் கூலிக்கு மற்றொருவரின் வயலுக்கு சென்றார். அப்போது வயலில் மின்சார கம்பம் இருந்தது. அதில் இருந்து கம்பி நீரில் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் உழுதபோது, கம்பி மாட்டின் காலில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி இரு காளைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை (செப்.5) மிலாடி நபி விழாவை முன்னிட்டு மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார். மீறி கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் நடைபெறும் இப்பயிற்சிக்கு பட்டபடிப்பு முடித்த 18–35 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் 15 பேருக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் 13 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள இரு பேருக்கு சாதிய உள்நோக்கத்தோடு வட்டாட்சியர் துறை செல்வம் பட்டா வழங்க மறுத்து வருகிறார் என கூறி பாதிக்கப்பட்டோர் இன்று(செப்.3) திண்டிவனம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட தயாராக காத்திருந்தனர்.
திண்டிவனம் – திருவண்ணாமலை உள்ளிட்ட புதிய ரயில் பாதை திட்டங்களை, தெற்கு ரயில்வே கிடப்பில் போட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். நிலம் கையகப்படுத்தாமை மற்றும் நிதி ஒதுக்கீடு குறைபாடுகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டங்களை விரைவில் செயல்படுத்த மாநில அரசு பங்காற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
விழுப்புரத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். சில சமயம் விபத்துகளும் ஏற்படுகிறது. உங்கள் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை இருந்தால் <
விழுப்புரம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில், தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.Sc, B.Sc. IT, B.C.A, M.Sc, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.