India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 2005ம் ஆண்டு நிலத்தகராறில், குலசேகரன், காத்தவராயம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதில் 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 6 பேர் வழக்கு நடந்த காலங்களில் மரணமடைந்தனர். இவர்கள் தவிர்த்து மீதமுள்ள 20 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விழுப்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஏப்ரல் 24) துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பாச்சாவடிமேடு, தோகை பாடி, கப்பூர், தெளி, ஒருகோடி, நெற்குணம், கோவிந்தாபுரம், கண்டம்பாக்கம், மரகதபுரம், ஜானகிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் மணிலா, எள், நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனைக்காக நேற்று (ஏப்ரல் 22) கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று ஒரேநாளில் 91 லட்சம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விலைபோனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று (ஏப்ரல் 22) குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி தலைமை தாங்கிட அதே கோம் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி (ம) ரேவதி முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குழந்தை திருமணம், நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பைபாஸ் சாலையில் மொளசூர் சந்திப்பு அருகே நேற்று (ஏப்ரல் 21) குறுக்கே பைக் வந்ததால் கார் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது புதுச்சேரி நோக்கிச் சென்ற, ‘எட்டியாஸ்’ கார் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பழனி இன்று (ஏப்ரல் 21) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், நேற்று (ஏப்.20) மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த பீகார் இளைஞர் ராஜேஷ்குமார்(23) என்பவர் பைப் விழுந்து உயிரிழந்தார். கடந்த 4 மாதங்களாக மரக்காணம் பக்கிம்காம் மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதில் இரவு பகலாக வெளிமாநில தொழிலாளர்கள் வேலை புரிந்து வரும் நிலையில், ராஜேஷ்குமார் மீது எதிர்பாராத விதமாக இரும்பு பைப் விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கம் /பயண அட்டை வழங்கும் இடம் உள்ள அலுவலகம் இரவு நேரத்தில் குடிகாரர்களின் கூடாரமாக மாறி வருகிறது, காலையில் பேருந்து நிலையம் வரும் பயணிகள் முகம் சுழிப்போடு செல்கின்றனர் தொடரும் இந்த அவலத்தை தடுத்திட நடவடிக்கை எடுக்குமா காவல்துறை ?நகராட்சி நிர்வாகம்? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளி வாக்கு சாவடி மையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையான வாக்குபதிவினை இருமகள்கள் சம்யுக்தா, சஞ்சித்ரா, சங்கமித்ரா ஆகியோருடன் இணைந்து வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.அதனை தொடர்ந்து பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக மோடி தொடர்வார் என தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், தேவனூர் ஊராட்சியில், நேற்று நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி விசிக மற்றும் பாமக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை ஒட்டி கலவரம் ஏதும் ஏற்படாத வண்ணம், அதனை தடுக்கும் விதமாக வரும் வாகனம் அரகண்டநல்லூர் காவல் நிலையம் அருகே இன்று (ஏப்ரல் 20) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.