Villupuram

News April 29, 2024

விழுப்புரம்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – போராட்டம்

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கம்பந்தூர் கிராமத்தை சேர்ந்த திவ்யா என்ற கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த நிலையில், நேற்று(ஏப்.28) சிகிச்சை பலனின்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் திவ்யா உயிரிழந்தார். இதனை அடுத்து, சரியான முறையில் சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிரே உள்ள நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News April 28, 2024

விழுப்புரம் அருகே பக்தர்கள் பங்கேற்பு

image

திருமங்கலம் ஒன்றியம் T.புதுகுப்பம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மனுக்கு நேற்று இரவு கல்யாண வைபோகம் திருமணம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் திருக்கல்யாண கோலத்தை கண்டு களித்தனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

News April 28, 2024

அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

image

சுட்டெரிக்கும் வெயிலை தாங்கும் விதமாக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர், மோர் பந்தல் திறக்க அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அந்த வகையில் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகம் ஐந்து இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல் இன்று பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கப்பட்டது.

News April 27, 2024

குட்கா பொருட்கள் கடத்திய 2 கார்கள் பறிமுதல்

image

விழுப்புரத்தில் இன்று 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் 2 கார்களில் கடத்தி செல்லப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட கோவிந்தராஜ், ஏழுமலை ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் செஞ்சி அனந்தபுரம் பகுதியில் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

News April 27, 2024

விழுப்புரம் அருகே கும்பாபிஷேகம்

image

விழுப்புரம் மாவட்டம், திருப்பாச்சனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பொன்னியம்மன், சப்த மாதாக்கள், ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தை புதுப்பித்து பஞ்சவர்ணம் தீட்டி புதியதாக நுழைவாயில் அமைத்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைக் கண்டுகளித்தனர்.

News April 27, 2024

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.

News April 27, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News April 27, 2024

அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நேற்று (ஏப்ரல் 26) பழங்குடியின செயல்பாட்டாளர் வழக்கறிஞர் அகத்தின் மற்றும் விசிக முற்போக்கு மாணவர் அணி நிர்வாகி பிரசாந்த் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து விழுப்பரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்பேத்கர் சிலைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட கோரிக்கை மனு அளித்தனர்.

News April 27, 2024

மதுக்கடை மூட வேண்டி விண்ணப்பம்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று (ஏப்ரல் 26) டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி சார ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. செஞ்சி சாலையில் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள 2 அரசு மதுபான கடைகளை மூடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் சதீஷ்குமார் மற்றும் பார்த்திபன் தலைமையில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷீ நிகாம் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News April 26, 2024

விழுப்புரம்- திருவாரூர் வரை நீட்டிப்பு

image

திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 2ம் தேதி முதல் விழுப்புரம் – மயிலாடுதுறை ரயில் திருவாரூர் வரையும்.மே 3ம் தேதி முதல் மயிலாடுதுறை – விழுப்புரம் ரயில் திருவாரூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06877 விழுப்புரம் – திருவாரூர் ரயில், விழுப்புரத்தில் இருந்து மாலை 6.25க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 10.45க்கு திருவாரூர் சென்றடையும் என செய்தி வெளியாகியுள்ளது.

error: Content is protected !!