Villupuram

News May 1, 2024

திண்டிவனம்: இறந்தவரின் கண் தானம்

image

திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட்
Ln. ஸ்மைல் ஆனந்த் ஏற்பாட்டில் இன்று (மே 1) கண் தானம் வழங்கப்பட்டது.
திண்டிவனம் நல்லியகோடன் நகர் உமாபதி தெரு விரிவாக்கத்தில்
வசித்து வந்த
சென்னம்மாள் என்பவர் இயற்கை எய்தியதை தொடர்ந்து,
அம்மையாரின் கண்கள்
பார்வை குறைபாடுள்ள நாலு நபர்கள் பயன்பெறும் வகையில் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண் தானமாக வழங்கப்பட்டது.

News May 1, 2024

விழுப்புரம் ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பழனி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

News May 1, 2024

விழுப்புரம்: கல்லூரியில் ஆண்டு விழா 

image

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் பகுதியில் உள்ள,இ. எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எட்டாம் ஆண்டு விழா நேற்று (ஏப்ரல் 30) முதல்வர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் வேல்முருகன் வரவேற்றினார், சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கிய பள்ளித் துறை தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார்.

News May 1, 2024

அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரியில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண் அள்ளியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி எம்பி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்.30) நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து வழக்கினை வரும் ஜூன் 3ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News April 30, 2024

பொதுமக்களுக்கு ORS கலந்த நீர் வழங்கல்

image

கடும் கோடை வெப்பத்தின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் விதமாக, மேல்மலையனூர் வட்டம், வளத்தி ஊராட்சியில் சுகாதாரத் துறை சார்பில் ORS கரைசலை பொதுமக்களுக்கு திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் இன்று (ஏப் 30) வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், வளத்தி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார், துணைத் தலைவர் கோவிந்தன் உள்ளிடோர் உடனிருந்தனர்.

News April 30, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சிகள்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டரங்கில் நேற்று முதல் மே 13ஆம் தேதி வரை கோடை கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். தடகளம், கபடி, கைப்பந்து, மல்லர்கம்பம், வாலிபால் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுவதாக ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

குடும்பத்தோடு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

image

ஆரோவில் அடுத்த குயிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (39). பிரபல ரவுடியான இவர் மீது 9 கொலை வழக்கு உள்ளிட்ட 24 வழக்குகள் உள்ளன. பாளையங்கோட்டை சிறையிலிருந்து கடந்த மாதம் வெளியே வந்த ரவுடிராஜ்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் நேற்று ஆரோவில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் விசாரணைக்காக அழைத்தபோது அவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

News April 30, 2024

விழுப்புரம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

பாதுகாப்பு அறையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் இன்று (ஏப்.29) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்ட (கள்ளக்குறிச்சி உள்பட) நீதித்துறையில் 124 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!