Villupuram

News May 9, 2024

விழுப்புரத்தில் சிசிடிவி ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுவதும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலை கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாவட்ட ஆட்சியர் பழனி அங்கு நேரில் சென்று சிசிடிவி கேமராக்களின் பட காட்சிகளை ஆய்வு செய்தார்.

News May 9, 2024

விழுப்புரம்: பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

image

மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு அய்யனார் கோயில் பின்புறம் அருள்பாண்டியன் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இன்று அதன் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் 4 பெண்கள் வானவெடி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு திரியில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அதன் உரிமையாளர் ராஜேந்திரன், கௌரி மற்றும் ஆண்டாள் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

News May 9, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

விழுப்புரம் திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா

image

விழுப்புரம், திருவக்கரையில் அமைந்துள்ளது தேசியக் கல்மர பூங்கா. இந்த பூங்கா இந்திய புவியியல் மையத்தால் பராமரிக்கப்படுகிறது. ஐரோப்பாவை சேர்ந்த இயற்கையியலர் சொன்னேரெட் என்பவர் முதன்முதலில் கல் மரங்கள் இருப்பு குறித்து இவ்விடத்தை 1781இல் ஆவணம் செய்தார். இங்கு இருக்கும் கல்மரங்கள் சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இங்கு இருக்கும் கல் மரங்கள் பலவும் படுக்கை நிலையில் உள்ளன.

News May 9, 2024

ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணை ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதை முதன்மைச் செயலாளர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சஹாய் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் இன்று நேரில் ஆய்வுசெய்தனர்.

News May 9, 2024

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முருகன் (21) நேற்று (மே 8) மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு ஏரிக்கரை வழியாக நடந்து சென்றார். அப்போது ஒருவர் இவரது மொபைல் போனை பறித்துக்கொண்டு ஓட முயன்றார். அவரை, மடக்கி பிடித்த முருகன் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் தொரப்பாடியைச் சேர்ந்த சரத்குமார் (24) என தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சரத்குமாரை கைதுசெய்தனர்.

News May 8, 2024

ஆட்சியர் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை CCTV கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, அவர்கள் நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News May 8, 2024

விழுப்புரம்: திமுக கவுன்சிலர் கணவர் சடலமாக மீட்பு

image

கோட்டக்குப்பம் அமீது நகரை சேர்ந்தவர் முகமது பாரூக் (50). இவரது மனைவி வகிதாபானு கோட்டக்குப்பம் 12ஆவது வார்டு கவுன்சிலராக சுயேட்சையாக வெற்றி பெற்று பின்னர் திமுகவில் இணைந்தார். முகமது பாரூக் சின்ன கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் பார்ம் ஹவுஸில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவரது அறையில் பிணமாக கிடந்தார். உடலை மீட்டு கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 8, 2024

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கோடைக்கால வெப்பம் தொடர்பான சிகிச்சை பிரிவினை முதன்மைச் செயலாளர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News May 8, 2024

விழுப்புரம்: இடி விழுந்து ‘தீ’ பற்றிய தென்னை மரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(மே 8) அதிகாலை முதலே, இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டி என்ற பகுதியில், இடி விழுந்து தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. மழையின் தாக்கம் இன்னும் குறையாமல், குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

error: Content is protected !!