India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் பல்வேறு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி, பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று மக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக மற்றும் தேமுதிகவினர் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என நேரிடையாகவே கோரிக்கை வைத்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கானை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை என பல சாதனைகளை படைத்தவர் மு.க. ஸ்டாலின். எனவே உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா வாழப்பட்டு பகுதியில் மைக் சின்னத்திற்கு இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவம் மகளிர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை மாற்றி அமைக்க மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று வாக்கு சேகரித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது தொடர்பான வாராந்திர கலால் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பழனி, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி மற்றும் பலர் உள்ளனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பனையபுரம் ஊராட்சியில், விருப்பம் தெரிவித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீட்டிற்கே சென்று அஞ்சல் வாக்கு சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று பேட்டியளித்துள்ளதாவது: விழுப்புரம் தபால் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட அலுவலகத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவின் உண்மை முகத்தை வெளிக்காட்ட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார். உடன் நிறுவனர் குணங்குடி அனிபா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கெடார் கோழிப்பட்டு பகுதிகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவ திட்டங்களுக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் மேலும், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மருத்துவ திட்டங்களுக்கு ரூ. 3000 கோடி மதிப்பீடு தயார் செய்து உலக வங்கியில் கடன் பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
சுதந்திர தின விழாவின் போது சமூகத்தில் தாமாக முன்வந்து தைரியமாகவும், தனித்தன்மையுடன் கூடிய துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் திருப்பதி – விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16853), திருப்பதி- காட்பாடி இடையே இன்று முதல் ஜூலை 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார். மேலும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த காதர் மொய்தீன், திமுக வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பாடுபடும் எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.