India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 85.12% பேரும், மாணவியர் 93.51% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 89.41% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 26வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே நள்ளிரவில் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நின்றுகொண்டிருந்த டாட்டா ஏசி வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காவலர் உட்பட நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் திண்டிவனம்-சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த வளத்தி மரக்கோணம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு வளத்தி காவல் நிலையம் அனுமதி மறுத்தது. இந்நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் வளத்தி காவல் நிலையத்தின் காரணங்களை ஏற்று ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது.
கீழ்புத்துப்பட்டு அய்யனார் கோயில் அருகே பட்டாசு ஆலை நடத்தி வந்த ராஜேந்திரன் வயது 56 கடந்த 9ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயம் அடைந்தார். கௌரி மற்றும் ஆண்டாள் ஆகியோரும் காயம் அடைந்தனர். உடல் முழுவதும் 80 சதவிகித தீக்காயத்துடன் ராஜேந்திரன் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள குடிநீர் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து நடைபெற்ற 12-வது மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது, மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார். தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் கடத்தி வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கூச்சி குளத்தூர் கூட்ரோட்டில் இன்று சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி மதுவிலக்கு சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மது கடத்தியவர்களிடம் வழக்குப்பதிவு செய்யாமல் ரூ.7000 லஞ்சம் பெற்றதாக புகார் வந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன், தலைமை காவலர்கள் நாகராஜ், புஷ்பராஜ், சுரேஷ் ஆகிய நான்கு பேரும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி மதுவிலக்கு சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மது கடத்தியவர்களிடம் வழக்கு பதிவு செய்யாமல் ரூ.7000 லஞ்சம் பெற்றதாக புகார் வந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் தலைமை காவலர்கள் நாகராஜ், புஷ்பராஜ் சுரேஷ் ஆகிய நான்கு பேரும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.