India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரத்தில் நேற்று (மே 16) இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சகாப்தின் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கிடப்பில் உள்ள நந்தன் கால்வாய் திட்டத்தை முடிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
விழுப்புரத்தில், விழுப்புரம் விஸ்வகர்மா சங்கத்தின் செயலாளரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளருமான சித்திரைவேல் மறைவுக்கு இன்று (மே 16) உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் விழுப்புரம் இரா.ஜனகராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.
விழுப்புரம் அருகே முகையூர் கிராமத்தில் அருகில் உள்ள வீரங்கிபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய கிணறு அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கிணறு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேருந்து நிலையம் பகுதியில், மரக்காணம் ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் தயாளன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு வெயிலை ஒட்டி வெள்ளரிக்காய், மோர், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை விழுப்புரம் வடக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் நேற்று (மே 15) வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம், பில்ராம்பட்டு முதல் அருணாபுரம் வரை பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின்கீழ், தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை தூய்மைப்பணியாளர்கள் மூலம் தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், செயற்பொறியாளர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
“கஞ்சனூர் அருகில் குடிநீர் கிணற்றில் கிடந்தது மலம் அல்ல; தேனடை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுத்து விளக்கம் அளித்த ஆட்சியருக்கு பாராட்டுகள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளை எச்சரிக்கையாக கையாள வேண்டும் என ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என ரவிக்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்குட்பட்ட கே.ஆர்.பாளையத்தில் உள்ள குடிநீர் திறந்தவெளி கிணற்றில் மலம் கிடப்பதாக இன்று காலை சுமார் 9 மணி அளவில் வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறையினர் நேரடி ஆய்வு செய்ததில் அது மலம் அல்ல; தேனடை என கண்டறியப்பட்டது. அதனை கிராம மக்கள் அனைவருக்கும் காண்பித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.