Villupuram

News October 22, 2025

மாவட்ட காவல்துறை சார்பில் மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம்

image

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப .சரவணன் தலைமையில் இன்று அக்.22 புதன்கிழமை மாதாந்திர குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது .இதில் திரளான அளவில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். பின்பு உரிய குறை தீர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

News October 22, 2025

விழுப்புரம்: ரயில்வே வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு 12th Pass, Any Degree முடித்து இருக்கவேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே

News October 22, 2025

விழுப்புரம்: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க

1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF

2. AIS – வருமானவரித்துறை சேவை

3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்

4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை

5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை

6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்

இதை மற்றவர்களுக்கு SHARE

News October 22, 2025

விழுப்புரம் மாவட்டத்திற்கு உதவி எண்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், பழைய கட்டிடங்கள், தாழ்வான பகுதிகள், நீர்நிலைகளை ஒட்டி வசிப்பவர்களை அருகிலுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்க உதவுமாறு காவல்துறை இளைஞர்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவசர உதவிக்கு 1077 (பேரிடர் உதவி), 04146 223265 (மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை) என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

விழுப்புரம் மாவட்டம் மழை நிலவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்தது, இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை அளவு விழுப்புரம் 168 மில்லி மீட்டர் கோலியனூர் 100 மில்லி மீட்டர் வளவனூர் 106 மில்லி மீட்டர் கெடார் 115 மில்லி மீட்டர் முண்டியம்பாக்கம் 95 மில்லி மீட்டர் வானூர் 184 மில்லி மீட்டர் திண்டிவனம் 103 மில்லி மீட்டர் செஞ்சி 123 மில்லி மீட்டர் வளத்தி 84 மில்லி மீட்டர். இன்றும் மழை இருக்கும்.

News October 22, 2025

விழுப்புரம்: இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க மாவட்ட சேர்மன் ஏற்பாடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க கட்டணமில்லா ஜே.சி.பியை விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து நேற்றிரவு (அக்.21) அவர் வெளியிட்ட அறிக்கையில்; விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால், இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க ஜேசிபி மற்றும் தண்ணீர் டேங்குகளை கட்டணமின்றி பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

News October 22, 2025

விழுப்புரம்: ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

image

விழுப்புரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணு

News October 22, 2025

விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

விழுப்புரத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News October 22, 2025

விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கவும். TNSDMA. இன்று அதிகாலை முதலே விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர் .

News October 22, 2025

விழுப்புரம் காவல்துறை இளைஞர்கள் தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்

image

வடகிழக்கு பருவமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இளைஞர்கள், தன்னார்வலர்கள் பழைய கட்டிடங்கள், தாழ்வான பகுதிகள் , ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளை ஒட்டி வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறைக்கு தகவல் அளிப்பதோடு, தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்குவதற்கு உதவுமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர உதவிக்கு 1077,04146-223265,9498100485.

error: Content is protected !!