India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற,தம்பதியில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும்,மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். https://ambedkarfoundation.nic.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
செஞ்சி அடுத்த கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(31). திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று (ஏப்.5) மதியம் 12 மணியளவில் விவசாய கிணற்றின் அருகே நடந்து சென்ற போது வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் விழுந்தார். உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
விநாயகரின் தனித்துவமே மனித உடலும், யானை தலையும் கொண்ட அவரது தோற்றம் தான். இதற்கு மாறாக விழுப்புரம் தீவனூர் கிராமத்தில் உள்ள பொய்ய மொழி விநாயகர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் போது அதில் விநாயகரை காண முடியும்.இங்கு விழுது இல்லாமல் ஒன்றோடு ஒன்று பின்னி உள்ள ஆலமரங்களை சுற்றி வந்தால் திருமண தடை நீங்கும் . அரிய விநாயகரை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் செயற்கை கைவினைஞர் பணியிடகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள். வயது வரம்பு: 18-32, கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Prosthetics and orthotics பிரிவில் 2 ஆண்டுகள் டிப்ளமோ. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900 வரை. எழுத்துத் தேர்வு கிடையாது. <
விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில், பொதுமக்கள் மின் மீட்டர் பழுது, மாற்றம், குறைந்த மின்னழுத்தம், மின் கட்டண பிரச்னை, சேதமடைந்த கம்பங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இந்த முகாம், செஞ்சி, கண்டமங்கலம், திண்டிவனம் மின் செயற்பொறியாளர்கள் அலுவலகத்தில் நடைபெறும்.
திண்டிவனத்தை அடுத்த ரெட்டனை பகுதியை சேர்ந்த சிறுமி தமிழரசி. இவர் ரெட்டனையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தார். அதே கிராமத்தில் வயலில் உள்ள கிணற்றுக்கு அருகே சிறுமி சென்றபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி சிறுமி கிணற்றுக்குள் விழுந்தார். அக்கம்பக்கத்தினர் கிணற்றில் மூழ்கிய சிறுமியை மீட்க முயற்சித்தபோது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் சிறப்பு முகாம் நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. முகாமில், பொதுமக்கள் மின் மீட்டர் பழுது, மாற்றம், குறைந்த மின்னழுத்தம், மின் கட்டண பிரச்னை, சேதமடைந்த கம்பங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இந்த முகாம், செஞ்சி, கண்டமங்கலம், திண்டிவனம் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும்.
தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
உப்புவேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (35). அதிமுக பிரமுகரான இவர், கடந்த 29ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (55) என்பவருடன், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெருமாள் நேற்று (ஏப்.3) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெய்வேலி 26 வது பிளாக் பகுதி சேர்ந்தவர் அழகானந்தம், 55. நேற்று இரவு இவர் குடும்பத்துடன் காரில் சென்னை நோக்கி சென்றார். இரவு 8:00 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பேரங்கியூர் நோக்கி சென்றபோது, கார் திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது காரில் இருந்த மனைவி சுந்தரி, 50; சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.