Villupuram

News September 5, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

விழுப்புரம்: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

image

விழுப்புரம் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.

▶️ இந்தியன் ஆயில்: 18002333555
▶️ பாரத் பெட்ரோல்: 1800224344
▶️ HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News September 5, 2025

பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைக்குமாறு அறிவுரை

image

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும்போது, அதன் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனத் தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், இதனைத் தடுக்க இயற்கை பூச்சி விரட்டிகள் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

News September 5, 2025

விழுப்புரத்தில் பள்ளி மாணவி சாதனை ஆட்சியர் பாராட்டு

image

விழுப்புரம் ஜெயந்திரா சரஸ்வதி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி குனவதி, கைப்பந்து போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கி, தேசிய அளவிலும் பங்கேற்றுள்ளார். இவரது திறமையை பாராட்டி பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் பரிசளித்தனர். மேலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

News September 5, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறுவோர்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்:
▶️ வழுதாவூர், திருமுருகன்
▶️ ரெட்டணை. பாலசுந்தரம்
▶️ மேல் ஒலக்கூர், இளங்கோவன்
▶️ வளவனுார்,முருகன்
▶️ கப்பை, அருமைசெல்வம்
▶️ செ.பூதுார், விஜயலதா
▶️ மேல்நெமிலி, லட்சுமி நாராயணசாமி
▶️ பக்கிரிதக்கா, ராஜலட்சுமி
▶️ ரெட்டணை, மாசிலாமணி
▶️ ராஜாம்புலியூர், நமச்சிவாயம்
மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஆசிரியர்களின் பெயர்களை SHARE பண்ணுங்க

News September 5, 2025

விழுப்புரம் பெண்கள் இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9150058446) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணு

News September 5, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது

image

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் வெள்ளி பதக்கம், சான்றிதழ் மற்றும் ஐந்தாயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 5, 2025

விழுப்புரம்: ரூ.1,50,000 சம்பளத்தில் அரசு வேலை

image

விழுப்புரம்: தமிழ்நாடு சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகு வேலைக்கு பல்வேறு பணிகளுக்காக இப்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், நேர்காணலில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த பணிக்கு ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>லங்கில் <<>>சென்று பார்த்துக்கொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் .

News September 5, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இன்று (செப்.5) மிலாடி நபியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்படும். அன்று எந்த மதுபானக் கடைகளும் செயல்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

விழுப்புரம்: அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசு வழங்கும் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தகுதியுடையவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம் பெறப்பட்ட விண்ணப்பங்கள்பூர்த்தி செய்து அங்கேயே வழங்கலாம் என ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!