India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த வெல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜபதி(35). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் இரவு, வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலைதடுமாறி மயங்கி விழுந்தார். அவரை மீட்ட, அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காணை அருகே உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி(27). இவர், பி.எஸ்.சி படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நீண்ட நாட்களாக இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், மன உலைச்சலில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காணை போலீசார் வழக்கு ஒஅதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வி.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர், புதுச்சேரி மாநிலம், திருவண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், இவர் தனது பைக்கில் சென்னை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது. நடுவே இருந்த தடுப்புச் சுவரில் எதிர்பாராத விதமாக மோதினார். இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அறிவுறுத்தலின்படி தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு மாநில நெடுஞ்சாலைகள்) த.அம்பாயிரநாதன் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை இன்று (பிப்.09) ஏற்றுக்கொண்டனர். உடன் விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)
Sorry, no posts matched your criteria.