Villupuram

News August 18, 2024

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் நாளை கலந்தாய்வு

image

திண்டிவனம் திரு. ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் நாளை(ஆக.19) முதுநிலை மாணவர்களுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு நடைபெறும் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 17, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (17.08.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 17, 2024

25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

image

திண்டிவனம் அருகே உள்ள கட்டளை கிராமத்தில் யுவராஜ் என்பவரின் 2 ஏக்கர் நிலத்தின் பட்டா அவரது தந்தை கதிர்வேல் பெயரில் இருந்துள்ளது. இந்த 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய விவசாயியிடம் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ லட்சுமணன் அவர்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

News August 17, 2024

விழுப்புரம் தியேட்டருக்கு வருகை தந்த நடிகை

image

நடிகர் விக்ரமின் தங்கலான் திரைப்படத்தில் நடித்த ப்ரீத்தி கரன் விழுப்புரம் ஜனாஸ் தியேட்டருக்கு நேற்று படக்குழுவினருடன் வருகை தந்தார். அப்பொழுது பொதுமக்கள் படம் பார்ப்பதற்காக வந்திருந்த போது ப்ரீத்தி கரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அவர் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

News August 17, 2024

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், இன்று விண்ணப்பம் செய்ய முகாம் நடத்தப்படுவதாக நேற்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவியது. இதனால், பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இது முற்றிலும் தவறான செயல். இத்தகைய தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 17, 2024

விழுப்பரம் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், வளமிகு மாவட்ட திட்டக்குழு அலுவலகத்தின் வளமிகு வட்டாரங்கள் திட்டம் (Focus Block) திருவெண்ணெய்நல்லூர் மற்றும் மேல்மலையனூர் திட்டம் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உட்பட பலர் உள்ளனர்.

News August 17, 2024

மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

image

திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அடுத்த சிறுவாடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (56).விவசாயம் செய்து வந்த இவர், நேற்று காலை வழக்கம்போல் தனது நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஒட்டிச்சென்றார். அப்போது, சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், காட்டுப்பன்றி வராமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News August 17, 2024

விழுப்புரத்தில் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

விழுப்புரத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் இன்று (ஆக.17) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், விழுப்புரம், மாம்பழப்பட்டு, வண்டிமேடு, திருவாமாத்தூர், சொர்ணாவூர், ராம்பாக்கம், குச்சிப்பாளையம், வீரணம், கிருஷ்ணாபுரம், திண்டிவனம், கிளியனூர், நாட்டார்மங்கலம், களையூர், அவியூர், சே.குப்பம், வீரமநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

News August 16, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.08.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 16, 2024

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

image

பருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பெருமக்கள் தங்கள் ஊர் நுழைவாயில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் வழித்துணை மாதா கோவில் கட்டியுள்ளனர். அவற்றினை அகற்றுவதற்கு தங்கள் பகுதி ஊராட்சி மன்ற நிர்வாகம் முயற்சிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இன்று (ஆகஸ்ட் 16) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!