Villupuram

News August 19, 2024

விழுப்புரம் போதை மீட்பு மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் உள்ள 1.Counsellor /Psychologist – 1, 2.Psychiatric Social worker – 1, 3.Staff Nurse – 1 ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணி புரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த மாதத்திற்குள் (31-08-2024) விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2024

தி.வெ.நல்லூர் அரசு கலை கல்லூரியில் நாளை கலந்தாய்வு

image

திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024 – 2025ஆம் ஆண்டு முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களின் தரவரிசை பட்டியல் விவரங்கள் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை அனைத்து பாடப்பிரிவுகள் மற்றும் முதுநிலை அறிவியல் மற்றும் கலை பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நாளை (20.08.2024) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் இந்திரா தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

மருத்துவ தரவரிசையில் விழுப்புரம் மாணவன் முதலிடம்

image

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த ரஜனீஷ் 720/720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். அதேபோல், 2ஆவது இடத்தை சென்னை மாணவர் சையது யூசுப், 3ஆவது இடத்தை சென்னை மாணவி ஷைலஜா பிடித்துள்ளனர். மேலும், 7.5% அரசு இட ஒதுக்கீட்டில் சென்னை அரசுப் பள்ளியில் படித்த மாணவி ரூபா முதலிடம் பிடித்துள்ளார்.

News August 19, 2024

அமைச்சர் பொன்முடியின் 74வது பிறந்தநாள் விழா

image

விழுப்புரம் திமுக மாநில துணை பொது செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடியின் 74 74வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவினர் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News August 19, 2024

விழுப்புரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், வளமிகு வட்டாரங்கள் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அபோது 3 ஆண்டுகளில், ஆண்டிற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் என்றும் திருவெண்ணெய்நல்லூர், மேல்மலையனூர் வட்டாரங்கள் முன்னேற்றம் பெறுவதற்கான அனைத்து பணிகளையும் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

News August 18, 2024

விழுப்புரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024- 25 ஆம் கல்வியாண்டிற்கு முதுகலை பாடப்பிரிவுகளுக்கான (M.A, M.Sc, M.Com) மாணவர் சேர்க்கைக்காக, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அசல்
மதிப்பெண் சான்றிதழ்களுடன் அந்தந்த துறைகளுக்கு நாளை காலை 10.00 மணிக்கு வருகைபுரிந்து பதிவு செய்ய வேண்டும். 20.08.2024 மற்றும் 21.08.2024 ஆகிய இரண்டு தேதிகளில் சேர்க்கை நடைபெறும்
என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News August 18, 2024

விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தேதி அறிவிப்பு

image

விழுப்புரம் கோட்டத்தில் கோட்ட அளவிலான ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் எதிர்வரும் 20.08.2024 அன்று விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 18, 2024

சட்ட விரோத மின்சார வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை

image

தின்டிவனம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் மாதவன் (56) என்பவர் மாடு மேய்க்க சென்ற போது மின்சார கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் துறை செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் யாரேனும் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்தால் அவர்களின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது.

News August 18, 2024

விழுப்புரத்தில் வீடு கட்டும் பணி நாளை துவக்கம்

image

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 4,094 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 6,830 எண்ணிக்கையிலான தனிநபர் இல்ல கழிவறைகள் கட்ட சம்பந்தபட்ட பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடு கட்டும் பணிகளையும், தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டும் பணிகளையும் நாளை முதல் துவங்கப்பட உள்ளது என ஆட்சியர் பழனி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 18, 2024

மின்சார வேலி அமைத்தது தொடர்பாக மூன்று பேர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று முன்தினம் மாதவன்(56) என்பவர் கால்நடைகளை மேய்க்க சென்ற போது மின்சார கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பிரம்மதேசம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுவாடி கிராமத்தை சேர்ந்த கோதண்டராமன்(38), ராஜ்குமார் என்கிற ராஜகுமரன்(25), அய்யனார்(38) ஆகிய 3 நபர்கள் கைது செய்தனர்.

error: Content is protected !!