Villupuram

News June 26, 2024

வேட்புமனுக்கள் திரும்ப பெற இன்று கடைசி நாள்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவுற்ற நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 24ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். இன்று மாலை வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

News June 25, 2024

போதைப் பொருள் விற்பனை – தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றை விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க பொதுமக்களுக்கு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மத்திய புலனாய்வு பிரிவுக்கு 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 9498410581 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 25, 2024

விழுப்புரத்தில் இலவச TNPSC பயிற்சி

image

விழுப்புரத்தில் TNPSC குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நாளை (ஜூன் 26) முதல் தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பில், ஒவ்வொரு வாரமும் பாடவாரியான தேர்வுகளும் மற்றும் முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதில், பங்கேற்க விரும்புவோர் இன்றைக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ஸ்ரீமதியின் தாயார் மனு நிராகரிப்பு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனு மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில், ஸ்ரீமதியின் தாயார் உள்ளிட்ட 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீமதியின் தாய் செல்வி உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரின் செயல்பாடுகளை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்டனர். “நாங்கள் முறையாக மனு அளித்திருக்கிறோம். எங்கள் மனுக்கள் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டுள்ளன” என குற்றம்சாட்டினர்.

News June 25, 2024

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: 29 வேட்பு மனுக்கள் ஏற்பு

image

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் வேட்பாளா்கள் தாக்கல் செய்த 64 மனுக்களில் 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் தெரிவித்தாா். வேட்பு மனுக்களை நாளை பிற்பகல் 3 மணி வரை திரும்பப் பெற கால அவகாசம் உள்ளது. அதன் பின்னா், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். தொடா்ந்து, அவா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியும் நடைபெறும்.

News June 24, 2024

பாமக வேட்பாளரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து ராதாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்பரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் திமுக வெற்றி பெற்றால் அந்த வேட்பாளருக்கு தான் நன்மை. ஆனால் பாமக வெற்றி பெற்றால் சமூகத்திற்கு நன்மை என்று பேசினார்.

News June 24, 2024

வானூர் அருகே திடீரென தீ பற்றிய கார்

image

வானூர் அடுத்த ஆதனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் முத்துவேல் வேலை சம்பந்தமாக இன்று பிரம்மதேசம் அருகே உள்ள வங்காரம் கிராமத்திற்கு காரில் சென்றுள்ளார். வங்காரம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது ரேடியேட்டர் பகுதியில் இருந்து புகை வெளிவந்து கார் தீப்பிடித்து எறிய தொடங்கியது. பின்னர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.

News June 24, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனுக்கள் ஏற்பு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், முக்கிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதில், போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்த திமுக அன்னியூர் சிவா, பாமக சி.அன்புமணி, நாதக அபிநயா ஆகியோரது வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News June 24, 2024

விழுப்புரத்தில் மட்டும் போராட்டம் இல்லை

image

கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் பலியான சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் 10ஆம் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், விழுப்புரத்தில் இன்று நடைபெற இருந்த அதிமுக போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

News June 24, 2024

நாம் தமிழர் நாளை முதல் பிரச்சாரம்

image

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நாளை முதல் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகு நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அந்த கட்சி விக்கிரவாண்டி தொகுதியில் எவ்வளவு ஓட்டுகளை பெறும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

error: Content is protected !!