Villupuram

News June 29, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

75.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில், விருப்பம் தெரிவித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான அஞ்சல் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News June 29, 2024

வாக்குப்பதிவு கருவிகள் கொண்டு செல்லும் பணி

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பயன்பாட்டிற்காக விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதலாக தேவைப்படும் வாக்குப்பதிவு கருவிகளை (Ballot Unit) கொண்டு செல்லும் பணி மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது.

News June 28, 2024

இபிஎஸ் சொல்வது உண்மை தான்: அன்புமணி

image

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியை அசிங்கப்படுத்துவது என்று இ.பி.எஸ் சொல்வது உண்மை தான் என பாமக தலைவர் ராமதாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் எதிர்கட்சியினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், சபாநாயகர் யாரையும் பேசவிடுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், எதிர்க்கட்சியினர் பேசும் விஷயங்கள் வெளியே வருவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

News June 28, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சிவி.சண்முகம் புகார்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், சட்டவிரோதமாக ஈவிஎம் இயந்திரங்களை விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு மாற்றியுள்ளதாகவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்திலேயே வைக்கப்பட வேண்டும் என்றும் எனத் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை SDPI கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமையும். பண விநியோகம், முறைகேடு உள்ளிட்டவற்றால் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பு குறைவு என பல கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

News June 27, 2024

விழுப்புரம்: திமுகவில் இணைந்த 500 பேர்

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக, பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர், நேற்று அமைச்சர் பொன்முடி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது திமுகவுக்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது. மனுதாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு நேற்று சின்னங்கள் ஒதுக்கப்பட்டதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News June 27, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சின்னங்கள் ஒதுக்கப்பட்டது

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியலில், பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளா்கள் தாக்கல் செய்த 64 மனுக்களில், 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

News June 27, 2024

பாமக டெபாசிட் இழப்பது உறுதி: அமைச்சர் பொன்முடி

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் எழுச்சியை பார்க்கும் போது பாமக டெபாசிட் இழப்பது உறுதியாகிவிட்டது என அமைச்சர் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காக நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றும், நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் ஆணும் பெண்ணும் சமம் என்றும் தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

500-க்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம்

image

விக்கிரவாண்டி திமுக அலுவலகத்தில் ஆவுடையார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் தேசிய முற்போக்கு கழகம் மற்றும் பாஜகவில் இருந்து விலகி அமைச்சர் பொன்முடி தலைமையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். அப்போது திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

News June 26, 2024

கள்ளச்சாராயம்: விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக கடந்த ஓராண்டில் மட்டும் 10,236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் இது தொடர்பாக புகார் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். சென்னை மத்திய புலனாய்வு பிரிவுக்கு 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!