India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டியில் தொகுதியில் 20 நாட்கள் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் அன்புமணி, நாதக சார்பில் அபிநயா போட்டியிடுகின்றனர். இங்கு வரும் ஜூலை 10 வாக்குப்பதிவு, ஜூலை 13 வாக்கு முடிவு வெளியாகிறது. மேலும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக விக்கிரவாண்டியில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ஜூலை 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சி.பழனி அவர்கள். மேலும், வாக்களிக்க ஏதுவாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் யாரும் நிறுவனங்களை இயக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இங்கு திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் அன்புமணி, நாம்தமிழர் சார்பில் அபிநயா போட்டியிடுகின்றனர். தேர்தல் பரப்புரை சற்று நேரத்தில் ஓயவுள்ளதால், அன்புமணி, உதயநிதி, சீமான் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, பாமக, நாதக வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 6 மணியுடன், தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
விக்கிரவாண்டியில் 3.89 கோடி முறை மகளிர் இலவச பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர். 53,375 பேர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 பெறுகின்றனர். ரூ.8.50 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 1,633 குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் விக்கிரவாண்டியில் 80,929 பேர் பயன் அடைந்துள்ளனர். 10,651 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயன் பெற்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு மக்களை சந்திக்க பயம் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். விக்கிரவண்டியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், இபிஎஸ்-க்கு மக்களை பார்த்தும் பயம், பாஜகவை பார்த்தும் பயம். அதனால்தான் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார். பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிவண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என கடுமையாக சாடினார். பின்னர், திமுக அரசு செய்த சாதனைகளைக் கூறி அன்னியூர் சிவாவுக்கு வாக்கு சேகரித்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று காலை தும்பூர் கிராமத்தில் அன்னியூர் சிவாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அன்னியூர் சிவா வெற்றி பெறும் நிலையில், நந்தன் கால்வாய் திட்டம் சீரமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரத்திற்கு திமுக அரசு அநீதி செய்துள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், விழுப்புரத்தில் 60,000 பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. சராசரியாக 1 மாவட்டத்திற்கு 3.05 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால், விழுப்புரத்தில் 5இல் 1 பங்கினருக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது” என்றார்.
தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். பாமக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவண்டியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “கஞ்சா போன்ற போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி கூலிப்படையாக மாறுகின்றனர். அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தாலே காவிரி பிரச்சினை வந்துவிடும்” என்றார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால், வேட்பாளர்கள் தற்போது இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. வரும் 13ஆம் தேதி வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குகள் எண்ணப்படும்.
Sorry, no posts matched your criteria.