India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 9 சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில், தற்போது 10ஆவது சுற்றும் நிறைவடைந்துவிட்டது. முடிவுகள்: திமுக – 63,205, பாமக – 27,845, நாம் தமிழர் கட்சி – 5,265 வாக்குகள் பெற்றுள்ளனர். 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் உள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, திமுக – 31,151, பாமக – 11,483, நாம் தமிழர் கட்சி – 2,275 வாக்குகள் பெற்றுள்ளனர். 4 சுற்றுக்களைத் தொடர்ந்து, 5ஆம் சுற்று முடிவிலும் திமுக கை ஓங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 10 மணிநிலவரப்படி திமுக வேட்பாளர் – 18,620, பாமக வேட்பாளர் – 8,776, நாதக வேட்பாளர் – 1,117 வாக்குகள் பெற்றுள்ளனர். இந்நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 9,844 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தபால் வாக்குகள் எண்ணும் இடத்தில் வாக்கு முகவர்களுடன் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தபால் வாக்கு சீட்டில் கூடுதல் மை இருந்ததால், சில வாக்குகள் செல்லாது என அதிகாரிகள் அறிவித்தனர். இதனால், வாக்கு எண்ணிக்கை அதிகாரிகளுடன் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை, எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 9 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் – 11,312, பாமக வேட்பாளர் 4,714, நாதக வேட்பாளர் 816 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 6,598 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதனால், வாக்கு எண்ணிகை சூடுபிடித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், முதல் சுற்றில் திமுக வேட்பாளர் – 5564, பாமக வேட்பாளர் 2894, நாதக வேட்பாளர் 303 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 5,468 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை, காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தபால் வாக்கு மற்றும் மின்னணு வாக்கு எண்ணிக்கையில், திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. திமுக வேட்பாளர் 8,500 வாக்குகளும், பாமக வேட்பாளர், 3,000 வாக்குகள் பெற்றுள்ளனர். இதனால், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பனையபுரம் அரசு பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்த திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தற்போது மின்னணு வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலை வகித்து வருகிறார். தபால் – 470, மின்னணு – 1,361 வாக்குகள் பெற்று இரண்டிலும் முன்னிலையில் உள்ளார். பாமக மற்றும் நாதக வேட்பாளர்கள் பின்னிலையில் உள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 798 வாக்குகள் ஒரே சுற்றில் 2 மேஜையில் எண்ணப்பட்டு வருகிறது. இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முன்னிலை வகித்து வருகிறார். 30 நிமிடங்களில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, பிறகு மின்னணு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 130 தபால் வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் முன்னிலை.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த வாக்கு எண்ணிக்கையில், முதலி தபால் வாக்குகள் எண்ணப்படும், பிறகு 8.30 மணியளவில் மின்னணு வாக்குகள் எண்ணப்படும். 1195 போலீசார், 24 மத்திய துணை காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்று நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News App-ஐ தொடர்ந்து பாருங்கள்.
Sorry, no posts matched your criteria.