India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 172 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோர்ட்டில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், குடியாத்தம் சார்பு நீதிபதியுமான பிரபு தலைமை தாங்கினார். இதில் ஏராளமான வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு வக்கீல் லோகநாதன், வக்கீல்கள் ஜெகதீசன், ரஞ்சித்குமார் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை(டிச 15) தொடங்கி வரும் ஜனவரி-5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே உரிமையாளர்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்று குட்டிகள் ஆகியவற்றுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டு கொள்ள வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று டிசம்பர் 14 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
காட்பாடி அடுத்த அம்முண்டி ஊராட்சியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவையை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி இன்று (டிசம்பர் 14) தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ப. கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை பதிவாளர் நர்மதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகமானது பழைய கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகிறது. இதையடுத்து அருங்காட்சியத்தை புதுப்பிக்க ரூ. 96 லட்சத்து 88 ஆயிரம் ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது இதுவரை 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது என தெரிவித்தனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம், அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
காட்பாடி அடுத்த மாதாண்டகுப்பம் ஊராட்சி, காட்டூர் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (டிசம்பர் 13) பார்வையிட்டு பயனாளிகளிடம் வீட்டிற்க்கான தொகை மற்றும் சிமெண்ட் மூட்டைகள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் கலந்து கொண்டனர்.
வேலுார் மாவட்டம் ,வேலூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் ஆட்சியர் தலைமையில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை வேலூர் அடுத்த சோழவரம் கிராமம், ஏ.ஏ.திருமண மண்டபத்தில் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அறிக்கையில் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 5 வயது முதல் 13 வயது வரை மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் வருகிற டிசம்பர் 15-ம் தேதி வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஊரிஸ் மேல்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் தொலைபேசி எண்044 27269148 அல்லது 9443429521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.