India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் கே.வி.குப்பம் வட்டம், வடுகன்தாங்கல் அடுத்த வேலம்பட்டு கிராமத்தில் நாளை (நவம்பர் 13) மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 7 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று உத்தரவிட்டார். அதன்படி, அணைக்கட்டு தலைமையிடத்து துணை தாசில்தார் சுதா தேர்தல் அலுவலக துணை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய செந்தாமரை தாலுகா அலுவலக துணை தாசில்தாராகவும் உள்பட மொத்தம் 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களை இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் நவ.15ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்கலாம். இதனால், இந்நிலையில், இன்றும், நாளையும் வேலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் 1100 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் மையங்கள் கணக்கிடப்பட்டு, வருவாய் துறை மூலம் புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி முன்னிலையில், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மு. பாபு தலைமையில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (நவ 12) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விஐடி பல்கலைக்கழகத்தின் 40-ஆவது ஆண்டு மாணிக்க விழா அண்ணா அரங்கத்தில் இன்று(நவம்பர் 12) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவில் குடியரசு முன்னாள் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இவ்விழாவுக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமை வகிக்கிறார்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2024-2025ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி
அணைக்கட்டு தாலுகாவில் நவம்பர் 20, 21 ஆம் தேதி நடக்க உள்ளது.அணைக்கட்டு தாலுகாவில் அரசு பணிகள், அரசு அலுவலகம்,ஆரம்ப சுகாதார நிலையம்,பள்ளிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அன்று மாலை அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
என் கட்டை கீழே விழும் வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் பேசிய அவர், காட்பாடி தொகுதியை கோவிலாக நினைக்கிறேன். அதனால் தான் இந்த தொகுதியில் இத்தனை முறை வெற்றி பெற்றுள்ளேன் என்றார்.
Sorry, no posts matched your criteria.