India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 16) நடத்திய சோதனையில் 66 மது பாட்டில்கள், 200 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. இப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
வேலூர் மாவட்டத்தில் 3 தாசில்தார்களை டிரான்ஸ்பர் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று மாலை உத்தரவிட்டார். அதன்படி பேரணாம்பட்டு தாலுகா தாசில்தார் வடிவேலு அணைக்கட்டு தாலுகா தாசில்தாராகவும், அணைக்கட்டு தாலுகா தாசில்தார் வேண்டா வேலூர் கலெக்டர் அலுவலக நிலப்பிரிவு தனி தாசில்தாராகவும், சென்னை சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் சிவசங்கர் பேரணாம்பட்டு தாலுகா தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் இன்று (நவம்பர் 16) நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் இறுதி பட்டியலில் இடம்பெற செய்ய திமுகவினர் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர். அம்பேத்கர் விருது பெற தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (நவம்பர் 15) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். விருதுக்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 20-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 15) நடத்திய சோதனையில் 89 மது பாட்டில்கள், 200 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வானது 2025 மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே மாணவர் விவரங்கள் பிளஸ் 1 பொதுத் தேர்வு அடிப்படையில் தயார் செய்யப்பட்டன. இதில், மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள், இறந்து போனவர்கள் விவரங்களை நீக்கும் பணிகள் முடிந்து மாணவர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வுக்கு 79 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் காட்பாடி செம்பராயநல்லூர் ஊராட்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (நவம்பர் 15) “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தை தொடங்கி வைத்து தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இதில், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி, காட்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் வேல்முருகன், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடந்த விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட குடியாத்தம், கள்ளுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். குடியாத்தம் வட்டார கல்வி அலுவலர்கள் என்.பி.கண்ணன், கே.உஷாராணி, பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா பிரேம்குமாரி ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.