India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
அணைக்கட்டு பகுதியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், இளமதன், சின்னராசு, ஆகிய மூன்று பேர் கடந்த 16ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தந்தை நேற்று (நவ 19) வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சிறுமியை வன்கொடுமை செய்த மூன்று பேரையும் தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், அரியூரில் உள்ள ஒரு வீட்டில் யானை தந்தம் ஒதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் யானைத் தந்தம் பதுக்கி வைத்திருந்த பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் சரத்குமார் (32), சம்பத் (57), மணிகண்டன் (37), குமார் (37), அனீப் (52), பழனி (68), தனபால் (63), ரவி (52), தரணிகுமார் (57) ஆகிய 9 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் ஏட்டு மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி விருஞ்சிபுரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நடராஜன் சத்துவாச்சாரிக்கும், மேல்பாடியில் ஏட்டு சிவக்குமார் விருதுபட்டுக்கும் என மாவட்டம் முழுவதும் 14 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி வேலூரில் நேற்று நடந்தது. இதில் பேசிய கலெக்டர் சுப்புலட்சுமி இந்தியாவில் அதிகளவு ராணுவ வீரர்களை அனுப்பும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது. முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் ஏதேனும் இருப்பின் அதனை கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நவ.20 மற்றும் 22 ஆகிய 2 நாட்கள் மாலை 4.30 மணி முதல் 6:00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த மக்கள் முகாமில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (நவ.19) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
காய்கறி (கிலோவில்) தக்காளி ரூ.20-22, வெண்டை ரூ.30, கத்தரிக்காய் ரூ.30-35, புடலை ரூ.35, பீர்க்கன் ரூ.40-50, சுரைக்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.40-60, கறிவேப்பிலை ரூ.45, கொத்தமல்லி ரூ.35, கேரட் ரூ.58, பீன்ஸ் ரூ.36-40, காலிபிளவர் ரூ.20-25, முள்ளங்கி ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.52-65, சின்ன வெங்காயம் ரூ 60-65, இஞ்சி ரூ.50, தேங்காய் ரூ.15-20-25, அவரை ரூ.50 விற்பனை செய்யப்படுகிறது.
பேரணாம்பட்டு அம்பேத்கர் நகர் மாந்தோப்பில் காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பாஸ் (30), படையப்பா (25), ஆனந்தன் (37), சேட்டு (43), அலிமுதின் (33) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
வேலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் அண்ணாசாலையில் போக்குவரத்து போலீசார் நேற்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 25 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு விதிகளை மீறியதாக 300 ஆட்டோக்களுக்கு 1.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.